சென்னை, பிப். 9- கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்ச ருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப் பேரவையில் விதி எண் 110இன் கீழ் அறிவித்தார். அதன்படி காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளா கத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கலை, இலக்கியம், அரசி யல் ஆகிய துறைகளில் முத்திரைப் பதித்ததன் அடையாளமாக உதய சூரியன் போன்று 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக, கருணாநிதி நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படு கிறது. இந்த அருங்காட்சியகம் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்படவுள்ளது. கருணாநிதி நினைவிடத்திற்கு உள்ளே 40 சென்ட் நிலத்தில் 1978 ச.மீ பரப்பளவில் இந்த அருங்காட்சி யகம் அமைய உள்ளது. பாதி அளவு கட்டுமானம் தரைக்கு கீழ் இருக்கும் வகையில் இது அமைக்கப்பட வுள்ளது. இதற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் தற்போது அனுமதி அளித்துள்ளது.