states

இந்தியா - சீனா இடையே நாளை பேச்சுவார்த்தை!

கடந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி நடந்த 12-வது சுற்று பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோக்ரா பகுதியில் இருந்து இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை விலக்கிக்கொண்டன. ஆனாலும், டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான 16-வது சுற்றுப்பேச்சுவார்த்தை ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் ராணுவ 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினெண்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா பங்கேற்க உள்ளார்.