states

விதிமுறைகளின்படி அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கை எடுத்திடுக: சிபிஎம்

சென்னை, ஜூன் 24-  அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி அனைத்துக்கல்லூரிகளிலும் மாணவர்  சேர்க்கையை நடத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியர் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேர்ந்திட விண்ணப்பித்து வருகின்றனர். மத்திய பள்ளிக் கல்வித்துறை வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 4 அல்லது 5 ஆம் தேதிகளில் வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபின்னர் 5 நாட்கள் கழித்தே அனைத்து கல்லூரிகளும் தங்கள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என கூறியதை கவனத்தில் கொள்  ளாமல் சில கல்லூரிகள் மாணவர் சேர்க்கை யை தொடர்வதும், சில கல்லூரிகள் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது என அறிவிப்பதும் ஏற்கத்தக்கதல்ல.

சிபிஎஸ்இ மாணவர்களும், அவர்தம் பெற்றோர்களும் மிகவும் பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கிறார்கள். மேலும், தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே கல்லூரி களில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டால், தங்களது எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற  அச்சத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் உள்ளனர். எனவே, தமிழகத்தின் அனைத்து கல்லூரி களும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவர்கள், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வாரிய மாணவர்கள், மறு மதிப்பீடு செய்ய கோரும் மாணவர்கள், மறு தேர்வு எழுதி தேர்வு முடிவு கள் வரப்பெற்ற மாணவர்கள் ஆகியோரது விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் அல்லது விண்ணப்பப் படிவம் மூலம் வரப்பெற்ற பின்னரே, தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.