சென்னை, ஜூன் 29- முஸ்லீம் மத வெறியர்களால் ராஜ ஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையற்கலைஞர் படுகொலைக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: பாஜகவின் செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மா, பாஜக தலைவர் ஜிண்டால் ஆகியோர் முகம்மது நபி குறித்து ஆட்சேபகரமான அவதூறு கருத்துக் கள் தெரிவித்ததற்கு நாடு முழுவதி லிருந்தும், சர்வதேச நாடுகளிலிருந்தும் கடும் விமர்சனமும், எதிர்ப்பும் வந்த பின்னரே பாஜக அரசு அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. ஆனால் அரசை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை கடும் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து கைது செய்து வருகிற பாஜக அரசு மதவெறி கருத்துக்களை தெரிவித்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய தங்களது கட்சியைச் சார்ந்த மத வெறியர்களை கைது செய்ய மறுத்து வருகிறது. இதனால் ஊக்கம் பெற்றுள்ள சங் பரிவார் அமைப்பைச் சார்ந்த ஒரு சிலர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக அதே மாதிரியான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த தையல் கலைஞர் கன்னையா லால் என்பவர் அப்படிப்பட்ட கருத்துக் களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள் ளார்.
இதனால் ஆத்திரமுற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செவ்வா யன்று (ஜூன் 28) அவரைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். கன்னையாலாலின் செயல் ஆத்திர மூட்டும் தன்மை கொண்டதாக இருந்தா லும் அதற்கான தீர்வு வன்முறையல்ல. சங் பரிவாரத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை சட்டப்படியாகவும், ஜனநாயக ரீதியாகவும் எதிர் கொள்ள வேண்டுமே ஒழிய இத்தகைய மத வெறி வன்முறைகள் சமூக பதற்றத் திற்கே வழி வகுக்கும். இந்த படு கொலையை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாக கண்டிப் பதோடு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதியில் சமூக அமைதியை நிலை நாட்ட கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.