states

ஓபிஎஸ்சும் பங்கேற்கும் பொதுக்குழுவைக் கூட்டி அதிமுக வேட்பாளரை அறிவிக்க வேண்டும்!

புதுதில்லி, பிப். 3 - ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு மட்டும் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் ஒன்றிணைந்து செயலாற்றும் கட்டா யச் சூழலை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது. “எடப்பாடி பழனிசாமி தரப்பினர், 2022 ஜூலை 11 அன்று கூட்டிய பொதுக்குழுவில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் களை நீக்கியதாக அறிவித்திருந்தாலும், இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இன்னும் இறுதித் தீர்ப்பை வழங்காததால், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் உள்ள டக்கிய பொதுக்குழுவை கூட்டி, அதில் அதிமுக வேட்பாளர் யார் என்று தேர்வு செய்யலாம்; அவ்வாறு தேர்வு செய்யப்படுபவரின் பெயரை, கட்சியின் அவைத் தலைவர் தேர்தல் ஆணை யத்திற்கு அனுப்பி வைக்கும்பட்சத்தில்; அதன்மீது தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இதன்மூலம், அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லுமா? தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி ஒருங்கிணைப்பா ளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கி ணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்கி றார்களா? என்ற இரண்டு கேள்விகளையும் உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக தள்ளிவைத்து விட்டு, புதிதாக கூட்டப்படும் பொதுக்குழு தேர்ந் தெடுக்கும் வேட்பாளருக்கு, அவைத்தலைவரின் கடிதத்தின் அடிப்படையில் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், பாஜகவின் ‘ஆசை’ நிறை வேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி க்கு எதிராக ‘ஒருங்கிணைந்த அதிமுக’ போட்டியிட வேண்டும் என்று, வெள்ளியன்று காலை எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து பாஜக தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் ‘முடியவே முடியாது’ என்று கூறியிருந்தனர். 

வெள்ளியன்று பிற்பகல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் இதையே இரு தரப்பினரும் கூறினர். அப்போது, “தற்போது உள்ள நிலவரப்படி பார்த்தால் இரு  தரப்பு வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப் படலாம். எனவே, இருவரும் பேசி முடிவெடுங் கள்” என்று நீதிபதிகள் எச்சரித்தனர். “நாங்கள் சில தீர்வுகளை கொடுக்க விரும்புகிறோம்; ஆனால், இரு தரப்பினருமே முரண்டு பிடிக்கி றீர்கள்” என்று கடிந்துகொண்ட நீதிபதிகள், ஒரு  கட்டத்தில், இரு தரப்பினருமே கையெழுத்திட வேண்டாம், நாங்களே உத்தரவு பிறப்பிக்கி றோம் என்று கூறி, ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் முடிவை அறிவித்தனர்.  உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, செய்தி யாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம் “நல்ல நோக்கத்திற்காக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. விரைவில்  பொதுக்குழுவை கூட்டுவதற்கான அறிவிப்பை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வெளி யிடுவார். ஆனால், போதுமான கால அவகா சம் இல்லாததால், வேட்பாளர் தேர்வு குறித்து, கடிதம் மூலமாக பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்படும். அதிமுகவில் பெரும்பாலான உறுப்பினர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபரே வேட்பாளராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார். எனினும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு தல்படி மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக பொ துக்குழு கூட்டப்படுமா? இரட்டை இலைச் சின்னமே கிடைக்காமல் போனாலும் பரவா யில்லை ஒருங்கிணைந்த பொதுக்குழுவை கூட்ட முடியாது என்ற முடிவுக்குச் செல்வார்களா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.