இந்திய நீதித்துறை வர லாற்றில் தந்தை - மகன் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக இதுவரை பணியாற்றியது கிடை யாது. ஆனால் இந்த சாதனையை முறி யடித்தவர் டி.ஒய்.சந்திரசூட் ஆவார். தனது தந்தையைப் போலவே (ஒய். வி.சந்திரஷூட் முன்னாள் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி - 1978 முதல் 1985 வரை) தலைமை நீதிபதி யாகி வரலாறு படைத்த பெருமைக் குரியவர். இந்நிலையில், நாட்டின் 50ஆவது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யான டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக் காலம் வெள்ளிக்கிழமை உடன் நிறைவு பெற்றது. 2022 நவம்பர் மாதம் தலைமை நீதிபதியாக பதவியேற்ற டி.ஒய்.சந்திரசூட் தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை அங்கீ கரித்தல், ஓர் பாலின உறவை அங்கீ கரித்தது, தேர்தல் பத்திரம் தொடர் பான முக்கிய விவரங்களில் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியவர். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதி பதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதி யாக இருந்த போது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை டி.ஒய்.சந்திர சூட் வழங்கியிருந்தாலும், கடைசி நேரத்தில் பிரதமர் மோடியால் சர்ச்சை எழுந்தன. டி.ஒய்.சந்திரசூட் தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டா டிய போது, பிரதமர் மோடி அங்கு சென்றிருந்தார். பிரதமர் மோடி அவரா சென்றாரா? இல்லை அழையா விருந்தாளியா சென்றாரா? என்பது வேறு விஷயம். ஆனால் பிரதமர் மோடி என் வீட்டிற்கு வந்தது தவ றானது இல்லை என டி.ஒய்.சந்திர சூட் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதித்துறை-அரசு கூட்டோ? என்று கேள்வியை பல்வேறு தரப்பினரிடம் இருந்து எழுப்பி யிருந்தது. இவ்வளவு பஞ்சாயத்திற்கு மத்தியில் டி.ஒய்.சந்திரசூட்டின் பணி நாட்கள் முடிவடைந்தது. வெள்ளிக் கிழமை மாலை உச்சநீதிமன்றத்தி லிருந்து அவர் விடை பெற்றார்.