மும்பை, டிச.18- மும்பை பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச் சியில் சனிக்கிழமையன்று அவர் பேசுகையில், ‘‘நாட்டில் ஆணவக் கொலைகளால் ஆண்டுதோறும் நூற்றுக்க ணக்கானோர் உயிரிழக்கின் றனர். சாதி மாறி மலரும் நேசத்திற்காகவே பல உயிர் கள் பறிபோகின்றன. நாட்டில் இன்றும் ஒடுக்கப்பட்ட நலிந்த மக்கள், பெரும்பான்மை சமூ கத்தினரின் அடக்குமுறை யால் தங்கள் விருப்பம் போல் வாழ இயலாத நிலை யில் உள்ளனர். நலிந்தோரின் கலாச்சா ரத்தை ஆதிக்க சக்தியினர் உடைத்தெறிகின்றனர். எளி யோரின் கலாச்சாரம் சில நேரங்களில் அரசாங்க அமைப்பு களாலும் சிதைக்கப்படு கிறது. சமூக கட்டமைப்பால் கடைநிலையில் உள்ள ஒடுக்கப்பட்டோரின் விருப் பங்கள் நிறைவேறுவதெல் லாம் மாயையாகத் தான் உள் ளது. எனக்கு எது நன்னெறி யாக இருக்கிறதோ அது உங்களுக்கும் நன்னெறி யாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே? உத்தரப் பிரதேசத்தில் 1991-இல் 15 வயது சிறுமி ஒரு வர் கொல்லப்பட்டார். அதை நியாயப்படுத்தி ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அந்த கட்டுரையில், கிராம மக்கள் 15 வயது சிறுமியின் படு கொலையை ஏற்றுக் கொண் டதாக குறிப்பிடப்பட்டிருந் தது. சமூகத்தின் நடத்தை விதிகளின்படி சரியென்று அவர்கள் ஏற்றுக் கொண்ட தாக தெரிவிக்கப்பட்டிருந் தது. ஆனால் பகுத்தறிவா ளர்களுக்கு அது நிச்சயமாக நடத்தை விதிகளாக இருக் காது. ஆண்டுதோறும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதாலேயே நூற்றுக் கணக்கானோர் உயிரி ழக்கின்றனர். சட்டப் பிரிவு 377 தன்பாலின உறவை கிரி மினல் குற்றமாகக் கருதி யது. அந்த நன்னெறி காலஞ் சென்றது. அதை உச்ச நீதி மன்றம் திருத்தி தன்பாலின உறவு கிரிமினல் குற்றமா காது என்றது. முற்போக்கு அரசியல் சாசனம் தான் நம்மை வழி நடத்திச் செல்லும் சக்தி’’ என்று கூறினார்.