states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காவிரி நதிநீர்ப் பங்கீட் டில் உச்சநீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை கர்நாடகா  மீறுவதாகவும், பெங்க ளூருவுக்கு குடிநீர் எடுப்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கண்காணிக்க உத்தர விடக்கோரியும் தமிழ் நாடு அரசு உச்ச நீதி மன்றத்தில் கூடுதல் மனு த்தாக்கல் செய்துள்ளது. 

நாமக்கல்லில் நடை பெற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப் படும்போது எழுந்து நிற்காமல், அமர்ந்து போனில் பேசிய காவல் துறை அதிகாரி சஸ் பெண்ட் செய்யப்பட்டார்.

உலகச் செய்திகள்

2022 ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் ஜெர்மனியின் பொரு ளாதாரம் 0.2 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எரி பொருள் நெருக்கடியால்தான் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக் கிறது. அமெரிக்காவின் தடைகளை அப்படியே ஜெர்மனி பின்பற்றியதால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், ஜெர்மனி குடிமக்களில் மூன்றில் ஒருவர் பெரும் அச்சத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியான நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் பயணம்  மேற்கொண்டுள்ளார். அவரது இந்தப் பயணத்திற்கு குரோசியா வின் ஜனாதிபதி சோரன் மிலானோவிச் கடும் கண்டனம் தெரி வித்திருக்கிறார். ஜப்பானும், தென் கொரியாவும் நேட்டோவிற்கு உட்பட்ட பகுதிகள் இல்லை. நேட்டோவில் குரோசியாவும் உள்ளது. ஆனால், இந்தப் பயணத்தில் அவர் எங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கியூபா மீதான அமெரிக்கத் தடைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதை கியூபா வரவேற்றுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த கியூபாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ், “புதிய உற்சாகத்துடன் உலகம் முழுவதும் உள்ள கியூபாவின் நண்பர்கள் தடைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள். பெருந்திரள் பேரணிகள் நடத்தப்படுகின்றன. அதோடு, அமெரிக்காவிலேயே இதற்கு ஆதரவு உள்ளது” என்று குறிப்பிட் டார்.

பனிப்பொழிவு:  476 சாலைகள் மூடல்

இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதி களில் புதிய பனிப்பொழிவு காரணமாக மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 476 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்துள் ளது. மாநிலத்தில் உள்ள 697 மின்சார விநியோக நிலையங்கள் மற்றும் 20 நீர் விநியோக நிலையங்க ளின் செயல்பாட்டிலும் பனிப்பொழிவு தடை ஏற் படுத்தியுள்ளது. 180 மூடப்பட்ட சாலைகளுடன் மாநிலத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்ட மாக சிம்லா இருந்தது.

தேர்தலில் போட்டி இல்லை: எடியூரப்பா

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடி யூரப்பா, வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனக்கு இப்போது 80 வயதாகிறது. இருப்பினும், மாநிலம் முழுவதும் பயணம் செய்து, பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர தன்னால் முடிந்த அனைத் தையும் செய்வேன் என்று அவர் கூறினார். மேலும், மத்திய அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறினார்.

தில்லியில் பெண் சுட்டுக் கொலை

தில்லியின் மேற்கு விஹாரில் திங்கள்கிழமை 32 வயது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜோதி என்ற பெண், பிளிப்கார்ட் டின் கூரியர் குழுவில் பணிபுரிந்தார். இரவு 7.30 மணியளவில் தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந் துள்ளது. பைக்கில் சென்ற இருவர், தனது மனைவியை சுட்டதாக அவரது கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சிபிஎம் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

ஈரோடு, ஜன. 31- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 27 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர செயலாளர் பி.சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, ஆர்.விஜயராகவன், ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எச்.ஸ்ரீராம், பா.லலிதா, தாலுகா செயலாளர் எம்.பாலசுப்ரமணி மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், முன்னணி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது.

ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகர் விசாகப்பட்டி னம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். “நானும் விசாகப்பட்டினத்திற்கு மாறுகிறேன்” என்று புதுதில்லியில் நடந்த நிகழ்வில் ஜெகன்  மோகன் கூறினார். ஆந்திராவின் தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றும் திட்டத்திற்கு பல  ஆண்டுகளாக எதிர்ப்பும், எதிர்ப்புகளும் நிலவிவருகின்றன.

மருந்தகத்தில் அணு உலை வெடிப்பு

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள மருந்துத் தொழிற்சாலையில் சிறிய ரக அணு உலை வெடித்ததில் செவ்வாய்க்கிழமை ஒருவர்  உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த தொழி லாளர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக அருகில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

கோரக்பூர் கோயில் தாக்குதல் குற்றவாளிக்கு மரண தண்டனை!

லக்னோ, ஜன. 31 - உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் அமைந்துள்ள கோரக்நாத் கோயில் நாட்டின் புகழ்பெற்ற கோயில் களில் ஒன்றாகும். உ.பி. மாநில முதல்வர் ஆதித்ய நாத்தே இந்த கோயிலின் மடாதிபதி ஆவார். அந்த வகையில், ஆதித்யநாத் கடந்த ஆண்டு  ஏப்ரலில் இக்கோயிலுக்குச் செல்வதாக இருந்த  நிலையில், அவரது பயணத்துக்கு ஒருநாள் முன்னதாக 2022 ஏப்ரல் 3 அன்று, கோரக்நாத் கோயிலுக்குள் ஆயுதத்துடன் நுழைந்த மர்ம நபர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அனில் குமார் மீது திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.  காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து  விசாரித்ததில், தாக்குதல் நடத்திய மர்ம நபர் கோரக்பூரை சேர்ந்த அகமது முர்டாசா அப்பாஸ் என்பது தெரியவந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டில் மும்பை ஐஐடி-யில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற இவர், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்றும் உ.பி. போலீசார் கூறினர். இந்த பின்னணியில், கோரக்நாத் கோயில் தாக்குதல் வழக்கை விசாரித்த லக்னோவில் உள்ள தேசிய விசாரணை முகமை (NIA) நீதி மன்ற நீதிபதி விவேகானந்தா சரண் திரிபாதி, 10 மாதங்களில் வழக்கை விசாரித்து திங்க ளன்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி அகமது முர்டாசா அப்பாஸுக்கு அவர் மரண தண்டனை விதித்துள்ளார்.

மக்கள் நலத்திட்டங்களை முன்னிறுத்துவோம் குஸ்தவோ பெட்ரோ உறுதி

பொகோடா, ஜன.31- ஓய்வூதியம், தொழிலாளர் துறை மற்றும்  சுகாதாரச் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட வற்றிற்கு முன்னுரிமை வழங்குவோம் என்று கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோ உறுதி அளித்துள்ளார். ஓய்வூதியத்திட்டத்தில் மாதத்திற்கு குறைந்தபட்சம் 110 அமெரிக்க டாலரை  ஓய்வூதியமாக வழங்கும் ஆலோசனையை பெட்ரோ முன்வைத்திருக்கிறார். ஓய்வூதி யம் தேவைப்படும் வயதானவர்களில் 30  லட்சம் பேருக்கு இந்த ஓய்வூதியம் தரப்படும். அதேபோன்று மருத்துவத் துறையில் மருத்துவமனைகளுக்கும், மக்களுக்கும் இடையிலான முகவர்களை நீக்குவதற்கான முயற்சிகளை மேற் கொள்ளவிருக்கிறார்கள். மருத்துவத்துறையில் செய்யப்பட வுள்ள சீர்திருத்தங்களுக்கு தனியார் நிறு வனங்களும், அவர்களுக்குத் துணையாக நிற்கும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரி வித்துள்ளன. தனது சீர்திருத்தம் குறித்துப் பேசிய பெட்ரோ, “மக்களுக்கு நோய்  வராமல் முடிந்த அளவுக்குத் தடுப்பதே நமது நோக்கமாகும். எளிதில் சென்றடையாத இடங்களில் இருக்கும் மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல் அவசியமாகும். ஏழை விவசாயிகளுக்கு மருத்துவம் என்பது முக்கியமானதாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார். ஓய்வூதியத்திட்டம் பற்றிப் பேசிய அவர், “தற்போதுள்ள ஓய்வூதியத்திட்டம் வர்த்தகமயமாகியுள்ளது. பல ஆண்டுகள் சேமித்த பிறகும், தனது முதுமைக் காலத்திற்கான ஓய்வூதியத்தைக் கூடப் பெற முடியாத சூழல் இருக்கிறது” என்றார். அதேபோன்று, தொழிலாளர்களுக்கான சமூக நலத்திட்டங்கள், விடுமுறைக்காலம் மற்றும் முறையான வேலை நேரம் உள்ளிட்ட வை குறித்த உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு நிலை யான வேலை மற்றும் கவுரவத்தை இது தரும் என்று பெட்ரோ கருதுகிறார்.