புதுதில்லி, ஜூலை 23 - நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்ட பின்பும், இன்றும் கூட உணவு கிடைக்காமல் மக்கள் பட்டினியால் உயிரிழந்து கொண்டி ருப்பதாக உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகள் தொடர்பான வழக்கை, 2020 மே மாதம் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா, பி.வி. நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வகையில், புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, இந்தியாவில் பட்டினிச் சாவுகள் நடப்பதற்கு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். நீதிபதி பி.வி. நாகரத்னா இது தொடர்பாக கூறுகையில், ‘இந்தியா வில் ஒருவர் கூட பசியால் உயிரி ழக்கக் கூடாது என்பதுதான் குறிக் கோள். ஆனால், துரதிருஷ்டவச மாக நாட்டில் வளர்ச்சி ஏற்பட்ட பிறகும் நாட்டு மக்கள் சிலர் உணவு கிடைக்காமல் பசியால் உயிரிழக் கின்றனர். கிராமங்களில் மக்கள் பசி தெரியாமல் தூங்க, தங்கள் வயிற்றை துணியால் இறுக்கமாக கட்டிக் கொள்கிறார்கள். உணவுப் பொருட்களை வாங்க காசு இல்லா மல் சிறியவர்களும் பெரியவர்க ளும் இவ்வாறு செய்து கொள்கி றார்கள்” என்று கூறினார்.
மேலும் இதுதொடர்பாக பேசிய நீதிபதிகள், “நாட்டின் வளர்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆகையால் அவர்களின் உரிமை களை மறுக்கக் கூடாது. அவர்களு க்கு ஒன்றிய அரசால் வழங்கப் படும் திட்டங்கள் சரியாக சென்ற டைய மாநில அரசுகள் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு அடுத்ததாக புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு முக்கிய பங்காற்றுகி றார்கள். அவர்களுக்கு படிப்பு அறிவு இல்லாததால் அரசுத் திட்டங்களை எப்படிப் பெறுவது என்று தெரிந்தி ருக்காது. மாநில அரசுகள் அவர்க ளுக்கு உதவ வேண்டும்” என்றனர். ஒன்றிய அரசின் சார்பில் ஆஜ ரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீல், “கடந்த ஜூலை 11 வரையில் நாடு முழுவதும் 27.95 கோடி அமைப்புசாரா தொழி லாளர்கள் அல்லது புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளதாக மாநில அரசுகள் ஒன்றிய அரசின் வலை தளத்தில் பதிவிட்டுள்ளன. அமைப்புசாரா தொழிலாளர்க ளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை யும் ஒன்றிய அரசு தொடங்கி உள்ளது. ரேசனில் விநியோகிக்க மாநில அரசுகள் கோரும் கூடுதல் உணவு தானியங்கள் குறித்து ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. தேவைப்பட்டால் மாநில அரசுகள் இந்திய உணவு நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம். பிரதமரின் ஏழைக ளுக்கான நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானி யங்கள் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட சமூக ஆர்வலரும், மூத்த வழக்கறிஞரு மான பிரசாந்த் பூஷண், ‘சந்தை விலைக்கு மாநிலங்கள் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு கூறுகிறது. பெரும்பாலான தொழிலா ளர்களுக்கு ரேசன் அட்டைகள் இல்லாததால் அவர்களுக்குப் பொருட்கள் கிடைப்பதில்லை. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்ப டையிலேயே ஒன்றிய அரசு உணவு தானியங்களை வழங்கி வருகிறது. சுமார் 15 சதவிகிதம் பேர் ரேசன் அட்டை பெற தகுதி பெற்றுள் ளனர். ஆனால் அவர்களுக்கு ரேசன் பொருட்கள் மறுக்கப்படு கின்றன” என்றார். இதற்கு நீதிபதிகள், “மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப் படவில்லை என்பதற்காக ஏழைக ளுக்கு ரேசன் பொருட்கள் வழங்கா மல் இருக்கக் கூடாது. அவர்களை சகோதர, சகோதரிகளாக கருத வேண்டும். புலம்பெயர் தொழிலா ளர்களாகப் பதிவு பெற்று ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கும் ரேசன் பொருள்கள் வழங்குவ தற்கான தீர்வை ஒன்றிய அரசு கண்டறிய வேண்டும். மாநில அரசு களும் புலம்பெயர் தொழிலாளர்கள் ரேசன் அட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரி வித்து வழக்கை இரண்டு வாரங்களு க்கு ஒத்தி வைத்தனர்.