states

ஓர்டேகா ஆட்சிக்கு ஆதரவு - கருத்துக் கணிப்பில் தகவல்

மனாகுவா, ஜூலை 15- அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தற்போதைய ஜனாதிபதி யான டேனியல் ஓர்டேகா, நிகரகுவாவைச் சரியான திசையில் வழிநடத்திச் செல்கிறார் என்று அந்நாட்டின் 70.2 விழுக்காடு மக்கள் கருதுவதாகத் தெரிய வந்துள்ளது. ஆலோசனை நிறுவனமான எம் அண்டு ஆரி மேற்கொண்ட ஆய்வில், ஜனாதிபதி ஓர்டேகா தலைமையிலான அரசு நன்கு இயங்குகிறது என்று 85 விழுக்காடு நிகரகுவா மக்கள் கருதுகிறார்கள் என்றும்,  நிர்வாகம் மிகவும் திறமையோடு கையாளப்படுகிறது என்று 85.3 விழுக்காடு மக்கள் நினைக்கிறார்கள் என்றும் கூறப் பட்டுள்ளது.  ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது நிகரகுவா மக்கள் பாது காப்பாக இருக்கிறார்கள். பொருளாதாரம் முன்னெப்போதையும் விட வலுவாகக் காட்சியளிக்கிறது என்றும் கருத்துக் கணிப்பில் பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.