ஜூபா, ஜூன் 2- சூடானில் அண்மைக்காலத்தில் பெரும் துன்புறுத்தல்களை சூடான் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டு வருகிறது. அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மூன்று பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். அதில் கட்சியின் பொதுச் செயலாளர் முகமது முக்தார் அல் காதிப்பும் ஒருவரா வார். ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்னெடுத்துச் செல்லும் அமைப்புகளில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாகும். இதனால் கடுமையான அடக்குமுறையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த மூன்று தலைவர்களும் தெற்கு சூடானுக்குச் சென்று அங்குள்ள புரட்சிகர அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்தனர். புரட்சியை எப்படி மீட்டுக் கொண்டு வருவது என்ற விவாதத்தை அவர்கள் நடத்தி யிருக்கிறார்கள். அங்கிருந்து திரும்பிய பிறகு தான் கைது செய்யப்பட்டனர்.