மதுரை, டிச.28- மதுரை விமான நிலை யத்தில் சிஐஎஸ்எப் வீரர்கள் தனது பெற்றோரை இந்தி யில் பேசச் சொல்லி காக்க வைத்து துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டி யுள்ளார். மதுரை விமான நிலை யத்திற்கு செவ்வாயன்று நடி கர் சித்தார்த்தின் பெற்றோர் வந்தனர். அப்போது அவர் கள் கொண்டு வந்த உடமை கள் அடங்கிய கைப்பையில் நாணயம் இருந்ததால் ஸ்கேனர் செய்யும்போது தெரியவந்தது. அந்த பையில் உள்ள நாணயங்களை அகற்று மாறு மதுரை விமான நிலைய பாதுகாப்பு வீரர்கள் இந்தி யில் கூறியுள்ளனர். இந்தி தெரியாது என்று நடிகர் சித் தார்த்தின் பெற்றோர் ஆங்கி லத்தில் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு வீரர்கள் ஆங்கிலம் பேச மறுத்ததாக வும் கூறப்படுகிறது. இதனால் 20 நிமிடங்கள் காக்க வைத்து துன்புறுத்திய தாக நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளங்களில் பதி விட்டார். இந்த பதிவு வைர லாகி பரவியது. தற்போது அவர் அந்த பதிவை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளார். விசாரணை நடத்துக! இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது டிவிட் டர் பக்கத்தில் வெளியிட் டுள்ள பதிவில், மதுரை விமான நிலையத்தில் சிஐ எஸ்எப் ( CISF) வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய இயக்குநரிடம் கோரியுள் ளேன் என்று தெரிவித்துள்ளார்.