states

பாலியல் அத்துமீறலில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை: முதல்வர் எச்சரிக்கை

சென்னை,ஜன.11- பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் எந்தக் கட்சியை சார்ந்தவராக இருந்தா லும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி பேசும்போது பெண் காவலருக்கே  பாதுகாப்பு இல்லை என்று விருகம் பாக்கம் சம்பவத்தை குறிப்பிட்டுப் பேசினார். அதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குற்றச்சாட்டைத் தெரிவித்துவிட்டு ஓடி, ஒளியாமல் இருந்து என்னுடைய பதிலைக் கேட்டிருக்க வேண்டும். அதுதான், உள்ளபடியே நியாயமாக இருக்கும்”என்றார். டிசம்பர் 31 அன்று இரவு 10-45  மணிக்கு பெண் காவலர் விருகம்பாக் கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைச் சட்டப் பிரிவு கீழும் வழக்குப் பதிவு செய்யப் பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரவின்குமார், ஏகாம்பரம் ஆகி யோர்  கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டனர் என்றும் அவர் கூறி னார். வழக்கு பதிவு செய்த  72 மணி நேரத்தில் கைது செய்ததுபோல், எந்த வழக்கிலாவது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததுண்டா? என்று கேள்வி எழுப்பினார்.  எஸ்.பி. அந்தஸ்த்தில் இருந்த பெண்  காவல் அதிகாரிகள் இருவரை, இதுமாதிரி புகாரில் அலைக்கழித்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி என்றும் இந்த அரசைப் பொறுத்தவரையில், பெண்களுக்கு எதிராக, பெண் காவலர்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் நடந்த ராமநாத புரம், பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவு விழாவில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் மரணம், தேவர் ஜெயந்தி மதுரையில் வெடிகுண்டு வீச்சில் 4 பேர் மரணம். சிவகங்கை, திருப்பாச்சேத்தி உதவி ஆய்வாளர் ஆன்வின் சுதன் படு கொலை, கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது. பொள் ளாச்சி சம்பவம் என்று பல்வேறு சம்பவங்களையும் சுட்டிக்காட்டிய முதல்வர் இந்த ஆட்சியைப் பொறுத்த வரை, யாராக இருந்தாலும், அரசியல் பார்க்காமல், கட்சி பார்க்காமல் உடனுக் குடன் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சி இது என்றும் கூறினார்.