சென்னை,டிச.17- திருடுபோன 500 ஆண்டு பழமை வாய்ந்த நடராஜர் உலோகச் சிலையை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோயிலில் 1972 ஆம் ஆண்டில் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் உலோகச் சிலை திருடு போனது. இதுகுறித்து கோவில் பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள ஒரு தனியார் ஏல மையத் தில், அந்த நடராஜர்சிலை ஏலம் விடப்பட உள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. ஆரம்பத் தொகை யாக 20 ஆயிரம் யூரோ முதல் 30 ஆயிரம் யூரோ வரை நிர்ணயித் திருந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ெஜயந்த் முரளி, ஐஜி தினகரன் தலைமையிலான காவலர்கள் இந்திய தொல்லியல் துறையை உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரி வித்தனர். மேலும், பாரீஸில் உள்ள இந்திய தூதரக அதிகாரி களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.
பாராட்டு
இதையடுத்து, நடராஜர் சிலையை ஏலம் விடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த சிலையை பிரான்ஸிலிருந்து தமிழகத்துக்கு 3 மாதத்துக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் மேற்கொண் டுள்ளனர். அப் பிரிவு காவலர்க ளுக்கு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.