சென்னை, ஏப்.20- சமூக நீதி காவலர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் கம்பீர சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை யில் வியாழனன்று (ஏப்.20) கேள்வி நேரம் முடிந்ததும் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். உத்தரப்பிரதேச மாநிலம், அகமதாபாத் மாவட்டத்தில் மிகப்பெரிய ஜமீன்தாரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் மகனாகப் பிறந்தவர் தான் வி.பி.சிங் என்று அழைக்கப் படும் விஸ்வநாத் பிரதாப் சிங். ஆடம்பர வாழ்க்கை வாய்த்தா லும் அதில் மனம் ஒட்டாமல் கல்லூரி படிக்கும் காலத்தில் காந்திய இயக்கத்தில் ஈடு பட்டார். சர்வோதய சமாஜில் இணைந்தார். பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார். தனது நிலங்களையே தானமாக வழங்கினார். 1969 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வென்றார்.
பிதாமகன்... இந்திய ஒன்றியத்தில் வர்த்தக அமைச்சர், நிதி அமைச் சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பதவி களை வகித்தார். தேசிய முன்னணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார். வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும் - அவர் செய்த சாதனை என்பது மகத்தானவை. அதனால் தான் அவரை இந்த மன்றத்தில் இப்போதும் போற்றிக் கொண்டு இருக்கி றோம். மண்டல் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின - பழங்குடியி னருக்கு ஒன்றிய அரசு பணியிடங்களில் தனி இடஒதுக் கீடு தரப்பட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப் பட்ட இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் தான் பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையமாகும். சமூக ரீதியாகவும் - கல்வி யிலும் பின் தங்கிய பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்க ளில் 27 விழுக்காடு இடஒதுக் கீட்டை வழங்கலாம் - என்ற பி.பி.மண்டல் பரிந்துரையின் உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர் தான் வி.பி.சிங்.
சுயமரியாதை சுடரொளி
அவர் பிறப்பால் பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல - ஏழை எளிய குடும்பத் தைச் சேர்ந்தவரும் அல்ல. மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தப் போகிறேன் என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபோது, ‘முற்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரால் இதனைச் செய்ய முடியாது’ என்று அமைச்சர் ஒருவரே சொன்ன போது, ‘இதோ... இப்போதே தேதியைச் சொல் கிறேன்’ என்ற கம்பீரத்துக்குச் சொந்தக்காரர் வி.பி.சிங். அதுதான் அவரது பதவிக்கே நெருக்கடியாக அமைந்தது. ‘சில நேரங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பதே நல்லது’ என்று சொல்லி பிரத மர் பதவியை விட்டு விலகிய சுயமரியாதைச் சுடரொளி வி.பி.சிங். 1988 ஆம் ஆண்டு தேசிய முன்னணி தொடக்கவிழா சென்னையில் நடைபெற்ற போது ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் ஊர்வலத்தை தலைமை தாங்கி நான் நடத்தி வந்தேன். பல்லாயிரக்கணக் கான இளைஞர்கள் வெள் ளுடை தரிந்து அணிவகுத்த வீரக் காட்சியை மேடையில் இருந்தபடி பார்த்து வணங்கி னார் வி.பி.சிங்.
காவேரி நடுவர் மன்றம்
அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல் பட்டு வருகிறது. இத்தகைய கொள்கை உரத்தை வழங்கி யவர்களில் ஒருவர் வி.பி.சிங் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டு மக்க ளின் உயிர்பிரச்சனையான காவிரி நீருக்காக நடுவர் மன்றத்தை அமைத்துத் தந்த வரும் அவர் தான். சென்னையில் அமைந் துள்ள உள்நாட்டு விமான முனையத்துக்கு காமராசர் பெயரையும் - பன்னாட்டு விமான முனையத்துக்கு அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவ ரான வி.பி.சிங்கின் நினை வைப் போற்றும் வகையிலும் - அவருக்கு தமிழ்ச்சமுதாயத் தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அவரது முழுவுருவக் கம்பீரச் சிலை அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித் தார்.