சென்னை, ஜூன் 18- மாநில உரிமை, அரசுக்கு எதிரான அணுகுமுறையுடன் தொடர்ந்து அதி கார வரம்பை மீறும் தமிழக ஆளுநரின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தேசிய கல்விக் கொள்கை, நீட், இந்திய ஒன்றியம் போன்ற பல அடிப்ப டையான அம்சங்களில், தேர்ந்தெ டுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் நிலைபாட்டுக்கு மாறாக தமிழக ஆளுநர் பேசிக் கொண்டே இருப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டு கிறது. அண்மையில் ஆளுநர், கேந்தி ரிய வித்யாலயா பள்ளிகளின் தலை மை ஆசிரியர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டி, தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்த பரி சீலனையை நடத்தியிருக்கிறார். அதில் தேசிய கல்விக் கொள்கையை அதன் சாரம் குறையாமல் அமல் படுத்துவதுதான் பள்ளி மட்டத்தி லேயே குழந்தைகளை வடிவமைக்க உதவும், இதன் மூலம் இந்திய தேசத்தை உலகின் அறிவு தலைநகர மாக மாற்றமுடியும் என பேசியிருக்கி றார். பெருவணிகமயமாகும் கல்வி யால், சமூக நீதி தொலைக்கப்பட்ட, மொழி திணிப்பு அம்சங்கள் கொண்ட, மதவெறி சாராம்சத்தை உள்ளடக்கிய பாடத்திட்டத்தால் உருவாகும் அறிவு அர்த்தமுள்ளதாக இருக்க முடியாது, அபாயகரமானதாகத்தான் இருக்கும்.
கேந்திரிய வித்யாலயா மற்றும் அதன் பாடத்திட்டம் உள்பட ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் வரும் என்றாலும், ஆளுநர் இது சம்பந்தமான கூட்டத்தில் பேசியிருப்ப தைத் தனிமைப்படுத்தி பார்க்க முடி யாது. ஆளுநரின் கடமைகள், அதிகார வரம்பு, அரசியல் சாசன கோட்பாடு கள், மாநில உரிமைகள் என முக்கிய அம்சங்களில் தமிழக அரசோடு முரண்படுகிறார் என்பது தான் கவ னிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசும், பல்வேறு அரசியல் இயக்கங் களும் தொடர்ந்து சுட்டிக்காட்டிய பிற கும் ஆளுநர் தன்னுடைய அணுகு முறையை மாற்றிக் கொள்ளவில்லை என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்துக்கு இணையானதொரு நிர்வாகத்தை ஆளுநர் நடத்த விரும்பு கிறாரோ என்ற ஐயப்பாட்டை எழுப்பு கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக் கப்பட வேண்டுமெனவும், ஜனநாயக எண்ணம் கொண்டோர் குரல் எழுப்ப வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.