சென்னை,அக்.23- திண்டுக்கல் மற்றும் பழனி வருவாய் கோட்டங்களில் வசிக்கும் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு மலை வேடன் பழங்குடியின இனச்சான்றிதழ் வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லி பாபு, மாநிலப் பொதுச்செயலாளர் சரவணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான டில்லி பாபு அவர்களின் 14.05.2018 தேதியிட்ட பத்திரிக்கை செய்தி யின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் (SHRC case No. 3686 of 2018) தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்தது, இதில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், இயக்குநர், பழங்குடியினர் நலத் துறை, வருவாய் கோட்டாட்சியர், திண்டுக் கல் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், பழனி ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப் பட்டனர். இந்த வழக்கில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 14.10.2022 அன்று வழங்கியுள்ள முக்கிய பரிந்துரைகள்.
1. இந்த வழக்கின் விசாரணையின் போது டில்லிபாபு அவர்கள் நேரில் ஆஜராகி வாதிட்டு 03.02.2021 அன்று ஆணையத் திற்கு மனு ஒன்றை அளித்தார், அதில், ஒன்றிய, மாநில அரசுகள், உச்சநீதிமன்றம், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஆகிய அமைப்புகள் பழங்குடியினர் இனச் சான்று வழங்குவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை வழங்கியும், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் முறையான விசார ணை நடத்தாமல் வருடக்கணக்கில் இனச்சா ன்றிதழ் வழங்காமல் காலம் கடத்துவதாக வும், கடந்த 10 வருடங்களாக நிலுவையில் உள்ள மனுக்களின் விபரங்களை ஆணை யத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.
2. திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சி யர், ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக் கையில், திண்டுக்கல் வருவாய் கோட்டத் தில் வசிக்கும் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்குவதில் சர்ச்சை உள்ளதாகவும், மானுடவியல் ஆய் வாளர் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து இவர்கள் பழங்குடியினத்தை சேர்ந்தவர் களா? இல்லையா? என்பது ஆய்வு செய்யப் படவேண்டும் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.
3. இப்பிரச்சனை குறித்து, எம்.ஆர். தங்கராஜ், திண்டுக்கல் மாவட்ட பழங்குடி மக்கள் சங்கம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்(SHRC case No. 1480/RRs/99/ நாள்: 05.02.2000 அன்று தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகளையும் அதன் நகலையும் டில்லி பாபு ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ளார், இந்த வழக்கில் தமிழ் நாடு மாநில மனித உரிமை ஆணையம் விரிவான உத்தர வினை வழங்கி, மலைவேடன் பழங்குடி இனச்சான்றிதழ் பெறுவதற்கு இம்மக்கள் படும் துயரங்களையும் விரிவாக கூறி 05.02.2000 அன்று உத்தரவு வழங்கி யது. எனினும், தமிழக அரசு இவ்விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஆணையம் தமிழக அரசுக்கும் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் களுக்கும் தகுந்த உத்தரவினை வழங்கு மாறும் ஆணையத்தை டில்லிபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.
4. மேலும், திண்டுக்கல் மற்றும் பழனி வருவாய் கோட்டங்களில் இனச்சான்று கோரிய மனுக்கள் 10, 15 வருடங்களாக நிலு வையில் இருப்பதால், பள்ளி, கல்லூரியில் சேரமுடியாமலும், அரசின் வேலை வாய்ப்பினை பெற முடியாமலும், மலை வேடன் இனச்சான்றிதழ் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை, இத னால் இம்மக்கள் சமூக ரீதியாகவும், பொரு ளாதர ரீதியாகவும் மிகவும் பின் தங்கிய நிலை யில் உள்ளனர். இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும், இம்மக்கள் இனச்சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித முறை யான ஏற்பாடும் இல்லாத காரணத்தினால் இம்மக்கள் இனச்சான்றிதழ் பெற முடியாத நிலை உள்ளது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
எனவே, தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்குகிறது.
i. பழங்குடியின மக்களுக்கு விரைந்து இனச்சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ii. பழங்குடியின மக்களுக்கு விரைந்து இனச்சான்றிதழ் வழங்குவதற்கு ஏதுவாக, வருவாய் கோட்டாட்சியர்/சார்-ஆட்சியர் களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும், மேலும் இனச்சான்றிதழ் விரைந்து வழங்குவதற்கு, தேவையான உத்தரவுகளை வழங்கவேண்டும்.
iii. சந்தேகத்திற்குரிய நிகழ்வுகளில் விசாரித்து இனவரைவியல் அறிக்கைகளை வழங்குவதற்கு போதுமான அளவில் மானிடவியல் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்.
iv.இனச்சான்றிதழ் மெய்த்தன்மை அறிவதற்கு அமைக்கப்பட்ட மாநில கூர் நோக்கு ஆணையம், மாவட்ட விழிக்கண் குழு விரைந்து விசாரணை நடத்த தமிழக அரசு தேவையான உத்தரவுகளை வழங்க வேண்டும். மேற்கண்டவாறு தமிழ் நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவினை வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.