கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர் பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவத்துறைக்கும், பிரியா மரணம் தொடர் பாக விசாரித்து அறிக்கை தர மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கும் ஆணையத்தின் தலை வர் பாஸ்கரன் உத்தர விட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை கைப்பற்றும் நோக்கில் எந்தவொரு செயலிலும் அறநிலை யத்துறை ஈடுபட வில்லை. ஆனால் கோவில் பட்டா யார் பெய ரில் உள்ளது என்பது குறி த்த ஆவணம் இதுவரை அரசிடம் சமர்ப்பிக்கப்பட வில்லை. இந்த விவகார த்தில் சட்டத்திற்குப் புறம்பாக தீட்சிதர்கள் செயல்பட்டால் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு அரசு நட வடிக்கை எடுக்கும் என இந்துசமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயனர்களிடம் இருந்து பெறப்படும் கேஒய்சி (KYC) தகவல்களின் அடிப்படையில் எதிர் முனையில் இருந்து அழைப்பவரின் பெயர் தொலைபேசி திரையில் தெரிய டிராய் (TRAI) ஏற்பாடு செய்துள்ளது. இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் “ட்ரூ காலர் (TRUE CALLER)” போன்ற செயலிகளுக்கு தேவை இருக்காது.
ஒவ்வொரு மாவட்டத் திலும் வேலைவாய்ப்பு முகாம் மூலம் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு களை வழங்க காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ் தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் துவக்க நிகழ்வாக கடந்த ஒருவா ரத்தில் ஜெய்பூரில் 3,000 இளைஞர்களுக்கும், ஜோத்பூரில் 3,500 இளை ஞர்களுக்கும் வேலைக் கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை செயல் அதிகாரி தியரி பொல்லூர் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜி னாமா செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தெரி வித்துள்ளது. தியரி பொல்லூர் முறைப்படி டிசம்பர் 31-ஆம் தேதி பதவி விலகுவார்.
போலந்து நாட்டில் நடந்த ஏவுகணை தாக்குதல், ரஷ்யாவால் திட்டமிட்ட தாக்குதல் என்பதற்கான அறிகுறிகள் இல்லை என நேட்டோ நாடுகள் கூட்ட மைப்பு அறிவித்துள்ளது. போலந்து நாட்டின் ரூபீஸ்ஜவ் மாவட்டத் திற்குட்பட்ட பிரி ஜிவோடோ கிராமத்தில் திடீரென நிகழ்த்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றி யது தேசிய போதைப் பொருள் தடுப்பு முகமை.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் மார்ச் 23, 2024 அன்று மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணைக்கு அந்நாட்டின் ஜனாதிபதி லூயிஸ் அர்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில் வளங்கள் பகிர்ந்தளிப்பதும் நடைபெறும். அந்தப் பணியை 2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கி விடுவோம் என்றும் லூயிஸ் அர்ஸ் அறிவித்திருக்கிறார்.
வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் ஜப்பானில் உள்ள இரண்டு நீதிமன்றங்கள் அவசர, அவசரமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. டோக்கியோவின் மையப் பகுதியில் இருக்கும் இந்த நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிப்பது தொடங்கியிருந்த நிலையில் இந்த அரசுக் கட்டிடங்களைத் தகர்க்கப் போவதாக யாரோ தொலைபேசியில் மிரட்டினார். உடனடியாக அனைத்து ஊழியர்களையும் வேறு இடங்களுக்கு மாற்றிய காவல்துறை, தங்கள் அனுமதி கிடைக்கும் வரையில் மீண்டும் உள்ளே வர வேண்டாம் என்று கூறியுள்ளது.
மின்சாரத்தால் இயங்கும் வண்டிகளின் விற்பனை ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அதிகரித்துள்ளது. மூன்றாவது காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட ஐந்து கார்களில் ஒரு கார் மின்சாரத்தால் இயங்கும் காராக இருந்திருக்கிறது. இரண்டாவது காலாண்டில் ஆன விற்பனையை விட, மூன்றாவது காலாண்டில் அதிகமான அளவு விற்பனை நடந்திருக்கிறது. 2035 ஆம் ஆண்டில் இருந்து அனைத்து கார்களும் மாசுபடுத்தாதவையாக இருக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.