கொழும்பு,அக்.16- அதானியின் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தை மறு பரிசீலனை செய்ய உள்ளதாக இலங்கையின் இடது சாரி ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க தெரிவித்துள்ளார். அதானி நிறுவனம் 440 மெகா வாட் மின் உற்பத்தி செய்வதற்காக சுமார் 3 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிக மான மதிப்புள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் திட்டத்திற்கு இலங்கையின் முந்தைய ரணில் விக்கிரம சிங்கே அரசு ஒப்புதல் கொடுத்திருந்தது. அந்த திட்டத்தில் முழுமையான வெளிப் படைத் தன்மை இல்லை எனவும், இந்த திட்டத்தால் இலங்கையின் சுற்றுச்சூழல் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என பல வழக்குகள் அந்நாட்டு உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது தலை மையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதானியின் காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்வேன் என ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க வாக்குறுதி கொடுத்தி ருந்தார். இந்நிலையில் கடந்த அக் - 7 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதானி நிறுவனத்துக்கு முந்தைய அரசு கொடுத்த ஒப்புதல் குறித்து மறு பரிசீலனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நவம்பர் 14 இல் நடைபெற உள்ள இலங்கை நாடாளு மன்ற தேர்தல் முடிந்த பிறகு அமைக் கப்படும் புதிய அமைச்சரவைக் கூட்டத் தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டு அறி விக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.