states

கோவை ஈஷா யோகா மையம் மீதான விசாரணையை துரிதப்படுத்துக!

சென்னை,அக்.20- கோவை ஈஷா யோகா மையம் மீதான  வழக்குகளை தமிழ்நாடு காவல் துறை விசாரிக்கத் தடை இல்லை என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்  விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செய லாளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கோவை வடவள்ளியை சேர்ந்த பேராசிரி யர் காமராஜ் தன் மகள்கள் லதா, கீதா, ஆகி யோர் ஈசா யோகா மையத்தில் யோகா பயி ற்சிக்கு சென்றவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டது குறித்தும் ,இரு மகள்களுக்கும் மொட்டை எடுத்து தனி அறையில் வைத்திரு ப்பதாகவும், தன்னையும், தன் மனைவியையும், மகள்களை பார்ப்பதற்கு அனுமதி மறுப்பதாக வும் உடனடியாக தங்கள் இரு மகள்களை யும் மீட்டுத் தர வேண்டும், என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், ஈஷா யோகா மையத்தின் தற்போது  வரையுள்ள அனைத்து வழக்குகளையும் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டது.  இத்தீர்ப்பை எதிர்த்து ஈஷா யோகா மையம்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை பெற்றது.  இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை மனு தாக்கல் செய்தது. அதில் ஈஷா யோகா மையத்திற்கு சென்ற பல பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என்றும், பெண்கள் குழந்தைகள் மீதான பல்வேறு பாலியல் வன்முறை வழக்குகள் தற்போது வரை  விசாரணையில் உள்ளது என்றும் ஈஷா யோகா மையத்தில் உள்ள தகன மேடை குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஈஷா யோகா மையத்தில் மீது உள்ள அனைத்து வழக்குகளையும் சட்டப்படி விசாரிக்க காவல்துறைக்கு தடையில்லை என்று தீர்ப்பளித்துள்ளது.  சட்ட விரோதச் செயல்களின் கூடாரமாக... ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக ஈஷா  யோகா மையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டு களை பாதிக்கப்பட்டவர்கள் முன்வைத்துள்ள னர். குறிப்பாக ஆதிவாசி மக்களின் நிலங்களை அபகரித்தது, யானை வழித்தடங்களை அழித்தது, சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் கட்டிடங்கள் எழுப்பியது, சுற்றுச்சூழல் பாதிப்பு,   ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள விவ சாய நிலங்களை அபகரிப்பது, அரசின் அனுமதி இன்றி ஈஷா யோகா மையத்தில் பள்ளிக் கூடம் நடத்துவது, போதைப் பொருள் விநியோ கம், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை கள், என ஒட்டுமொத்தமாக சட்ட விரோத செயல் களின் கூடாரமாக இருக்கும் ஈஷா யோகா  மையத்தின் மீது நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யில் விசாரணையை துரிதப்படுத்திட சிபிசிஐடி விசாரணைக்கு  உத்தரவிட வேண்டும்.  மேலும் தமிழ்நாடு மகளிர் ஆணையம் நேரில் சென்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.