சென்னை, ஜூன் 4- 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 6.70 லட்சம் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து ஆராய்ந்து காரணத்தை கண்டுபிடிப்போம் என்றும் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மே முதல் வாரத்தில் தொடங் கிய பொதுத்தேர்வு அண்மையில் முடி வடைந்தது 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன. கொரொனோ பெருந்தொற்று காலத் தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு மீதான அச்சம் போன்றவை மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வராததற்கு காரண மாக முன்வைக்கப்பட்டன.
அதன்படி சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் பொதுத் தேர்வில் பங்கேற்க வில்லை என்பது அரசு தேர்வுகள் துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந் துள்ளது. பொதுத்தேர்வில் இத்தனை லட்சம் பேர் பங்கேற்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை யில், மாணவர்கள் பங்கேற்காதற்கான காரணம் குறித்து ஆராயப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறி யுள்ளார். மாநில அளவிலான சிலம்பப் போட்டியை சென்னை புதுக்கல்லூரி யில் சனிக்கிழமை (ஜூன் 3) துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு பணிகளில் விளை யாட்டுத் துறையில் சிலம்பம் போட் டிக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டை முதலமைச்சர் வழங்கியுள்ளார். பாரம் பரிய விளையாட்டான சிலம்பத்தை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். சிலம்பத்தின் வரலாற்றை அறிய தனி குழு அமைத்துள்ளார். சென்னைக்கு அருகில் விளையாட்டு நகரம், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பு என விளையாட் டிற்கு முக்கியத்துவம் அளித்து முதல மைச்சர் செயல்பட்டு வருகிறார். அரசுப் பள்ளிகளில் வயது கடந்த மாணவர்க ளின் சேர்க்கை வழக்கம் போல் நடை பெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை மேற்கொண் டோம் விரைவில் சுற்றறிக்கை வெளியாகும் என்றார் அமைச்சர்.