மகள் காதல் திருமணம்: மருமகன் வெட்டி படுகொலை
கிருஷ்ணகிரி, மார்ச் 21- கிருஷ்ணகிரி மாவட் டம், கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் இதனை பெண்வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) கே.ஆர்.பி. அணை அருகே ஜெகன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிப் படு கொலை செய்தது. ஜெக னின் உறவினர்கள் அங்கு வந்து சாலை மறியலில் ஈடு பட்டனர். இதற்கிடையே பெண் ணின் தந்தை சங்கர், கிருஷ் ணகிரி மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
‘களங்கப்படுத்தும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அனுமதியுங்கள்’
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதி யுள்ளார். அதில், ‘’மக்களவையில் மூத்த அமைச்சர்கள் என் மீது முன்வைத்த அடிப்படை யற்ற, அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு நான் ஏற்கனவே கடந்த 17-ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். மீண்டும் அதே கோரிக்கையை முன்வைக்கி றேன். நாடாளுமன்ற நடைமுறையின் கீழ் உள்ள சட்டப்பிரிவு 357, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்குகிறது. சபாநாயகரின் அனுமதியுடன் இந்த சட்டப்பிரிவின் கீழ் உறுப்பினர் ஒருவர் பதில் அளிக்க முடியும். ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு சூழலில் சட்டப்பிரிவு 357ன் கீழ் தன்னிலை விளக்கம் அளிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்’’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமருக்கு ‘பானி பூரி விருந்து’ கொடுத்த மோடி
இந்தியா வருகை தந்திருந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பானிப்பூரியை ருசித்துச் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் பிரத மர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் நேரம் செலவிட்டார். அப்போது ஜப்பான் பிரதமருக்கு இந்தியா வின் உணவு வகைகளான ப்ரைட் இட்லிஸ், மாம்பழ ஜூஸ் மற்றும் பானிப்பூரி உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். இதில்தான் ஜப்பான் பிரதமர் பானிப்பூரியை மிகவும் விரும்பி சாப்பிடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
‘இந்துத்துவாவே ஒரு புரட்டு’ என டுவீட் செய்த நடிகர் கைது
“பொய்களால் கட்டமைக்கப்பட்டதே இந்துத்துவா. ராமர், ராவணனை தோற்கடித்து அயோத்திக்குத் திரும்பியபோதே இந்திய ‘தேசம்’ தொடங்கியது என்று சாவர்க்கர் கூறுகிறார்; இது ஒரு பொய். 1992-இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதிதான் ‘ராமர் பிறந்த இடம்’ என்றதும் ஒரு பொய் உரிகவுடா - நஞ்சேகவுடா ஆகியோர்தான் திப்பு சுல்தானை கொலை செய்தவர்கள் என்று 2023இல் கூறுகிறார்கள். இதுவும் ஒரு பொய். இந்துத்துவாவை உண்மையால் வீழ்த்த முடியும். அந்த உண்மை என்பது இங்கு சமத்துவம் ஆகும்” என்று கன்னட நடிகர் சேத்தன் குமார் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்காக, அவரை கர்நாடக பாஜக அரசின் காவல்துறை கைது செய்து, நீதி மன்றக் காவலில் வைத்துள்ளது.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது வழக்கு!
மகாராஷ்டிர மாநிலம், சோலாபூர் மாவட்டம். பார்சி பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுமி மீது, மார்ச் 5 அன்று அவரது வீட்டிற்குள் நுழைந்த இரு இளைஞர்கள் கொடூர மான தாக்குதலை நடத்தினர். இந்த கோரத் தாக்குதலில் தலை மற்றும் கை, கால்கள் என உடல் எங்கும் படுகாயம் அடைந்த ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுமியின் புகைப்படம் சமூகவலை தளங்களில் வெளியானது. அதனை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணையில் இருக்கும் போது பாதிப்புக்கு உள்ளான சிறுமியை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தியதாக கூறி சஞ்சாய் ராவத் எம்.பி. மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
வேலையில்லா பட்டதாரிக்கு ரூ.3000; மகளிர்க்கு ரூ.2000
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், படித்து முடித்து வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்; டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவித்துள்ளார். முதல் 2 ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை யும் அதன்பிறகு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.