states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு உப கரணங்கள் தயாரிப்பு நிறு வனமான  ‘சிஸ்கோ’ நிறு வனம் 4 ஆயிரம் ஊழியர் களை (5%) பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறி வித்துள்ளது.
  2. தென்கிழக்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி உரு வாகியுள்ளது. இந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப் பெறும் என இந்திய வானி லை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
  3. நாட்டின் முதன்மை புல னாய்வு அமைப்பான சிபிஐ-யில் உள்ள 7,295 பணியிடங்களில், 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
  4. கர்நாடகா சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூர் வனப்பகுதியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த (கோவை) லாரி மோதி யதில் யானை உயிரிழந் தது. லாரியின் ஓட்டுநர், கிளீனர் வனத்துறையின ரால் கைது செய்யப்பட்டனர்.
  5. தில்லி துவாரகா பகுதி யில் 17 வயது சிறுமி மீது  அமிலம் வீசிய விவகாரத் தில் 3 பேர் கைது செய்யப் பட்டனர்.
  6. இடதுசாரி ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோவை நீக்கிய நாடாளுமன்றத்தை இழுத்து மூட வேண்டும் என்றுகோரி பெருவில் மக்கள் பெருந்திரள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம் என்று தற்போதைய ஜனாதிபதி போலுவார்டே அறிவித்தாலும் மக்களின் கோபம் தீரவில்லை. மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய காஸ்டில்லோவை நீக்கிய நாடாளுமன்றம் தேவையில்லை என்று பெரு நாட்டின் வீதிகளில் முழக்கமிட்டவாறு மக்கள் வலம் வருகிறார்கள்.
  7. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத்தலைவர் இவா கைலி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகத் தெரிய வந்ததால் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் அவரது பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. கத்தாரில் இருந்து ஏராளமான பணம் மற்றும் பரிசுகளை அவர் பெற்றுக் கொண்டது உறுதிப்படுத்தப்பட்டது. வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக 625 வாக்குகளும், ஆதரவாக ஒரு வாக்கும் விழுந்தன. இருவர் வாக்களிக்கவில்லை.
  8. பிரிக்ஸ் அமைப்பின் உறவுகளை மேலும் பலப்படுத்த தென் ஆப்பிரிக்கா உறுதி எடுத்துள்ளது.  தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா  ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் உள்ளன.  உலக  மக்கள் தொகையில் 41.5 விழுக்காடு இந்த நாடுகளில் உள்ளது.  இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஜனவரி 1, 2023 ஆம் தேதி முதல் சீனாவிடமிருந்து தென் ஆப்பிரிக்கா ஏற்றுக் கொள்ளவிருக்கிறது.