சென்னை மாநகரம் முழு வதும் குற்றங்களை தடுக்க இதுவரை 83,226 சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ள நிலை யில், மேலும் 2,730 இடங் களில் 8,189 சிசிடிவி கேமராக்களை பொருத்த காவல்துறையினர் திட்ட மிட்டு உள்ளனர். புதிய சிசிடிவி கேமராக்கள் 6 மாதத்திற்குள் அமைக்கப் பட உள்ளது.
நெல்லூர் மாவட்டத்தின் கண்டுக்கூரு என்ற இடத் தில், டிச.28 அன்று தெலு ங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். இதேபோல், ஜன.1ல்குண்டூர் பொதுக் கூட்டத்திலும் நெரிசல் ஏற் பட்டு 3பேர் உயிரிழந்த னர். இதுகுறித்து விசா ரிக்க நீதிபதி பி.சேஷ சயனா ரெட்டி தலைமை யில் ஆந்திர அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
தீக்கதிர் முக்கிய செய்திகள்
ஆளுநர் ரவி மீது திருமாவளவன் சாடல்
தூத்துக்குடி, ஜன, 8 - சட்டமன்றத்தில் உரையாற்ற தகுதி யற்றவர் ஆளுநர் ஆர்.என்.ரவி என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுநர் ஆர்எஸ்எஸ் தொண்டரைப் போன்று செயல்பட்டு வருகிறார். அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை மேற் கொள்ளலாம். அரசியலமைப்பு சட்டத் திற்கு எதிராக அவர் செயல்படுகிறார். குதர்க்கமான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்று தான் எனவும் கூறுகிறார். அரசின் கொள்கைக்கு எதிரானவர் மாநில ஆளுநராக நீடிப்பதற்கு தகுதி இல்லை. அப்படிபட்ட ஒருவர் சட்டப் பேரவையில் உரையாற்றுவது எந்த வகையில் பொருத்தமுடையதாக இருக்கும்? திராவிட மாடல் அரசின் கொள்கையை முன்னிறுத்தக் கூடிய உரையை ஆற்றுவதற்கு அவர் எந்த வகையிலும் தகுதி படைத்தவர் அல்ல” என்றார்.
மாநில நூலகக்குழு அமைப்பு
சென்னை, ஜன. 8 - மாநில நூலகக் குழு மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் மாவட்டந் தோறும் பொதுநூலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு பொது நூலகச் சட்டப்படி 2004-ஆம் ஆண்டு நூலக க்குழு அமைப்பட்டது. அதன் பின்னர் அக்குழு மாற்றி அமைக்கப்படவில்லை. சென்னை மாவட்ட நூலகங்களை நிர்வகிக்க, சென்னை மாநகர நூலக ஆணைக்கு 2010-ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. இந்தக்குழுவின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் 2011ம் ஆண்டு அந்த பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டனர். அதன்பிறகு சென்னை மாநகர நூலக ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. இந்நிலையில் மாநில நூலகக் குழு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர், துறை செயலாளர்கள், 3 சட்டமன்ற உறுப்பினர்களுடன், ஜி.கோபண்ணா, தமிழ்நாடு நூலகச் சங்கத்தைச் சார்ந்த ஜி.இரத்தினசபாபதி, சென்னை நூலகச் சங்கத்தைச் சார்ந்த கே.நித்யானந்தம், சென்னை மாநகர நூலக ஆணைக்குழு உறுப்பினர் சார்பாக ரோஜா முத்தையா, ஆராய்ச்சி நூலக இயக்குநர் ஜி.சுந்தர் உட்பட 15 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கவிஞர் மனுஷ்யபுத்திரன் (எ) எஸ்.அப்துல்ஹமீது, கவிஞர் தமிழ்தாசன் உள்ளிட்ட 11 உறுப்பினர்களைக் கொண்ட சென்னை மாநகர நூலக ஆணைக் குழு வையும் அமைத்து அரசு ஆணை வெளி யிட்டுள்ளது. இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரி வித்துள்ளார்.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம்: கல்வித்துறை அறிவிப்பு
சென்னை,ஜன.8- தமிழ்நாட்டில் 2022-23 ஆம் கல்வி யாண்டுக்கான 12 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்குகிறது. மாநிலம் முழு வதும் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகிறார்கள். இதற்காக மாணவர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை கல்வித் துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, செய்முறை கொண்ட பாடங் களை உள்ளடக்கிய பாடத் தொகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், சேவைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ.225ம், செய்முறை இல்லாத பாடங்களை உள்ளடக் கிய பாடத் தொகுப்பில் படிக்கும் மாண வர்களுக்கு தேர்வு கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், சேவைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ.175-ம் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. இந்த தேர்வு கட்டணங்களிலிருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் மாணவர்கள், கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய் பேச இயலாத மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.சிஏ., எஸ்.எஸ்., எஸ்.டி., எம்.பி.சி. பிரிவை சேர்ந்த மாணவர்கள். அதேபோல், பி.சி., பி.சி.எம் பிரிவில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள மாணவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக் கப்படும் என்று கல்வித்துறை அறிவித் ்திருக்கிறது. சுயநிதி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு கிடையாது. மாண வர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை பெற்று ஜனவரி 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளம் மூலம் செலுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கு கல்வித்துறை உத்தர விட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்: ரூ.20 கோடியில் தரம் உயர்த்த முடிவு
சென்னை,ஜன.8- சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை ரூ.20 கோடியில் தரம் உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஞாயிறன்று (ஜன.8) ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், “ 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட வணிக வளாக அங்காடியை ஆய்வு செய்தோம். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கோயம்பேடு வணிக வளாக அங்காடியில் பூ மார்க்கெட்டில் ஏற்கனவே திறக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் ஊழியர்கள் தங்கும் விடுதி, தானிய கிடங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆய்வு செய்தோம்”என்றார். கோயம்பேடு வணிக வளாகத்தை தரம் உயர்த்த ஒதுக்கப்பட்ட 20 கோடி நிதி முழுமை யாக பயன்படுத்தப்படும். இதற்காக பிப்ரவரி வரைக்கும் 4 கட்டங்களாக தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். பிறகு அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். கோயம்பேடு அங்காடியை சுற்றி யுள்ள சாலையோர வியாபாரிகளை முறைப் படுத்த திட்டம் தயார் செய்து பேச்சு வார்த்தை நடத்தப்படும். பண்டிகை காலத்தில் சிறப்பு அங்காடிகளில் இடைத் தரகர்களின் தலையீட்டை நிச்சயம் தடுப்போம். திருமழிசை மொத்த சந்தை பணிகள் முடியும் நிலையில் உள்ளது. கோயம் பேடில் உள்ள கடைகளை அங்கு இட மாற்றம் செய்வது குறித்து, வியாபாரி களுடன் ஆலோசனை செய்து, முதல்வரின் கருத்துகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.