உற்பத்தித் துறை வளர்ச்சியில் பின்னடைவு
உற்பத்தித் துறை வளர்ச்சியில் பின்னடைவு இதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த ‘எஸ்&பி குளோபல்’ (S&P Global) என்ற மதிப்பீட்டு நிறுவனம் பல்வேறு துறைகளை சேர்ந்த, சுமார் 400 நிறுவனங்களின் ஜூன் மாத உற்பத்தி நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2022-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், உற்பத்தித் துறையின் வளர்ச்சி அடிப்படையிலான ‘பிஎம்ஐ’ குறியீடு, 53.9 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது மே மாதத்தில், 54.6 புள்ளிகளாக இருந்தது குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து பார்க்கும்போது, ஜூன் மாதத்தில்தான் மிக குறைவான உற்பத்தி வளர்ச்சி எட்டப்பட்டு உள்ளதாக தெரிவித்துள் ளது. பிஎம்ஐ குறியீட்டைப் பொறுத்தவரை, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந் தால் சரிவை குறிக்கும். இந்தியாவின் உற்பத்தி அடிப்படையிலான பிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்கு மேலே இருந்தாலும் பலவீனமாகவே உள்ளது. “உற்பத்தியில் மென்மையான அதிகரிப்பு, தொழிற்சாலை ஆர்டர்கள், கொள்முதல் பங்குகள் மற்றும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் ஜூன் மாதத்தில் பிஎம்ஐ பின்னடைவுக்கு காரணமாகி உள்ளன. தேவை அதி கரிப்பு காரணமாக உற்பத்தியில் அதிகரிப்பு காணப்பட்டாலும், கடுமையான பணவீக்க அழுத்தங்கள் காரணமாக வளர்ச்சி சுருங்கி விட்டது. இரசாயனங்கள், எலக்ட்ரானிக்ஸ், எரிசக்தி, உலோகங்கள் மற்றும் ஜவுளி என ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்கள் தங்களின் உள்ளீட்டு செலவுகள் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளன” என்று ‘எஸ்&பி குளோபல்’ குறிப்பிட்டுள்ளது.
மும்பை, ஜூலை 2 - 2022-23 நிதியாண்டிற்கான இந்தி யாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி ஜிடிபி (GDP) மதிப்பீட்டை உள்நாட்டு மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் (Crisil) 5 புள்ளிகள் வரை குறைத்துள்ளது. நடப்பு 2022-23 நிதியாண்டில் இந்தி யாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 7.8 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், தற்போது அந்த கணிப்பை 7.3 சதவிகிதமாக குறைத்துக் கொண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஏற்றுமதி தேவை குறைதல் மற்றும் அதிக பணவீக்கம் ஆகியவையே இந்த கீழ்நோக்கிய திருத்தத்திற்கு காரணம் என்று கிரிசில் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும், அண்மை யில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாகவே இருக்கும் என கூறியிருந்தது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள கிரிசில் நிறுவனம், பொருட்களின் விலை உயர்வு, சரக்கு விலைகள் உயர்வு, உலகளாவிய வளர்ச்சி கணிப்பு கள் குறைவால் ஏற்றுமதியில் ஏற் பட்டுள்ள இழுபறி மற்றும் தனியார் நுகர்வு பலவீனமாக இருப்பது போன்ற பல எதிர்மறையான குறிகாட்டிகளே வளர்ச்சிக் குறைவுக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.