புதுதில்லி, ஜூன் 12- “குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிப்பது தொடர்பாக மம்தா பானர்ஜி பானர்ஜி தன்னிச்சையாக கடிதம் அனுப்பி யிருப்பது வழக்கத்துக்கு மாறானது; எந்த வொரு தன்னிச்சையான நடவடிக்கையும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பாதிக்கும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி கூறி யுள்ளார். ஜூலை 18 அன்று நடைபெற உள்ள குடிய ரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெற வுள்ள ஜூன் 15 அன்று புதுதில்லியில் நடைபெற வுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி யுள்ளார். அதே வேளை, ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் வரும் புதன்கிழமை (ஜூன் 15) நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள் ளது. இந்தநிலையில் மம்தாவின் கடிதம் தேவையற்றது, தன்னிச்சையான ஒன்று என்ற கருத்து எழுந்துள்ளது.
ஏற்கனவே ஒரு கூட்டம் நடத்தத் தீர்மா னித்துள்ள நிலையில் மம்தா பானர்ஜியின் முயற்சி பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிடும்; முன் ஆலோசனை இல்லா மல் இதுபோன்ற தன்னிச்சையான கடிதத்தை எழுத வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி அளித்துள்ள பேட்டியில், “மம்தா பானர்ஜி எனக்கும் கடிதம் அனுப்பி யிருப்பதை சமூக ஊடகம் மூலமாகத் தெரிந்து கொண்டேன். வழக்கமாக, இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் பிற கட்சிகளுடன் பரஸ்பர கலந்துரையாடல்கள் மூலமாக இடம், தேதி, நேரம் ஆகியவை தீர்மானிக்கப் பட்டு நடத்தப்படும். அந்த வகையில், ஏற்கெ னவே தில்லியில் வரும் 15-ஆம் தேதி ஆலோ சனைக் கூட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் தீர்மா னித்துள்ளன. ஆனால், மம்தா பானர்ஜி தன்னிச்சையாக கடிதம் அனுப்பியிருப்பது வழக்கத்துக்கு மாறானது. அதிக எண் ணிக்கையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கி ணைப்பதே நமது நோக்கம். ஆனால், எந்த வொரு தன்னிச்சையான நடவடிக்கையும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பாதிக்கும்” என்றார்.
து.ராஜா கருத்து
“முன் ஆலோசனையின்றி இதுபோன்ற கூட்டத்திற்கு கடிதம் எழுதுவது நல்லதல்ல. தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு சக்தி களின் ஒற்றுமை அவசியம். ஏற்கனவே ஒரு கூட்டம் நடத்தத் தீர்மானித்துள்ள நிலையில் மற்றொரு கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருப்பது குழப்பத்தையும் தவறான புரிதலையும் தான் உருவாக்கும் என்று சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா கூறியுள்ளார்.
சுர்ஜேவாலா கருத்து
அரசியல் சாசனத்தையும், நமது அமைப்பு களையும், குடிமக்களையும் ஆளும் கட்சியின ரின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு நபர் ஜனாதிபதியாக தேசத்திற்குத் தேவை என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. இது காலத்தின் தேவை. காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட பெயரைப் பரிந்துரைக்கவில்லை என்றாலும், குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெ டுப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்; இதன் மூலம் நமது அரசியலமைப்பைப் பாது காக்கவும் முடியும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.