சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஏராளமான போலீசார் பல்கலைக்கழகம் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தையடுத்து மாணவர் சங்க நிர்வாகிகளிடம் துணை வேந்தர் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.