states

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சிக் கலைப்பு முயற்சியில் பாஜக!

மும்பை, ஜூன் 21 - மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவின் 13 எம்எல்ஏ-க்களை, பாஜக தன்பக்கம் இழுத்து விட்டதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவைக் குழுத்  தலைவர் பதவியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே-வை சிவசேனா நீக்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 3-ஆவது முறை யாக ஆட்சிக்கலைப்பு முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. ஆளும் சிவசேனா கட்சியின் 13 எம்எல்ஏ-க்கள், சுயேட்சை எம்எல்ஏ-க்கள் என மொத்தம் 26 பேரை பாஜக தனக்கு ஆதர வாக வளைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும்  அவர்களை குஜராத் மாநிலத்திற்கு அழைத்துச்  சென்று சூரத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளது.  மேலும் 11 எம்எல்ஏ-க்களை வளைப்பதன் மூலம் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கி ரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய ‘மகா  விகாஸ் அகாதி’ கூட்டணி அரசை கலைத்து விடலாம் என்று கணக்குப் போட்டு வேலை யைத் துவங்கியுள்ளது. 

குதிரை பேரம் மூலம் ஆட்சியைக் கலைப்ப தில் கில்லாடி என்று கூறப்படும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். பாஜக தேசியத்  தலைவர் ஜே.பி. நட்டாவுடன் ஆலோசனை நடத்தி வரும் அவர், மகாராஷ்டிர மாநில  பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னா விஸையும் தில்லிக்கு வரவழைத்துள்ளார். இந்நிலையில் 13 எம்எல்ஏ-க்களுடன் பாஜக வுக்கு தாவத் தயாராகி வரும் அமைச்சர் ஏக்நாத்  ஷிண்டே-வை, சட்டப்பேரவைக் குழுத் தலை வர் பதவியில் இருந்து நீக்கி, சிவசேனா கட்சி  நடவடிக்கை எடுத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோரை சமாதா னப்படுத்தும் முயற்சிகளை சிவசேனா மேற் கொள்ளும் என கூறப்பட்ட நிலையில், இந்த  திடீர் நடவடிக்கையை சிவசேனா எடுத்துள்ளது. இதனிடையே தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, “சிவசேனாவின் நிறுவனர் பால்தாக் கரே-வின் சிந்தனைகளுக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்ய மாட்டேன். பால்தாக்கரே இந்துத்துவாவை எங்களுக்கு கற்பித்துவிட்டு சென்றுள்ளார். அதிகாரத்துக்காக பால்தாக்க ரேவின் சிந்தனைகளுக்கு துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். பாஜக-வானது, சிவசேனாவில் உட்கட்சி குழப்பதை ஏற்படுத்தி, அந்த கட்சியின் எம்எல்ஏக்  களை வளைத்துள்ள நிலையில்,  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் தங்கள் கட்சி  எம்எல்ஏ-க்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகா ராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதேபோல சிவ சேனாவுக்கு 55 எம்எல்ஏ-க்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 51 எம்எல்ஏ-க்கள், காங்கிரஸ்  கட்சிக்கு 44 எம்எல்ஏ-க்கள், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு 29 எம்எல்ஏ-க்கள் என உள்ளனர். பெரும்பான்மைக்கு மொத்தம் 145 எம்எல்ஏக்  கள் தேவை என்ற நிலையில், சிவசேனா, காங்கி ரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து  169 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் கடந்த 3 ஆண்டு களாக கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்நிலையில்தான் பாஜக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் இறங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் தனக்  குள்ள உறுப்பினர் பலத்தைக் காட்டிலும் கூடுத லாக ஒரு இடத்தை பாஜக வென்றது. அப்போதே  ஆள்பிடிக்கும் வேலையை செய்து முடித்து விட்டது.  அடுத்தபடியாக திங்களன்று நடைபெற்ற சட்டமேலவைக்கு நடைபெற்ற தேர்தலிலும் 4 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என்ற  நிலையில் 5-வதாக ஒரு வேட்பாளரை நிறுத்தி  பாஜக வெற்றி பெற்றது. சிவசேனா எம்எல்ஏ-க்கள், கட்சி கொறடா உத்தரவை மீறி பாஜக  வேட்பாளருக்கு வாக்களித்தனர். பாஜக-வுக்கு  106 உறுப்பினர்களே இருக்கும் நிலையில், அந்தக்கட்சி 133 வாக்குகளை பெற்றது. சிவ சேனாவுக்கு 55 உறுப்பினர்கள் இருக்கும் நிலை யில், அந்தக் கட்சிக்கு 51 வாக்குகளே கிடைத்  தன.  இதனால் அதிர்ச்சியடைந்துள்ள சிவ சேனா, சட்டப்பேரவையில் தங்களுக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்ற உறுப்  பினர்களின் அணிவகுப்பை நடத்த சிவசேனா முடிவு செய்துள்ளது.