காவல்துறை டிஜிபி-யிடம் மாதர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை,ஜூன் 4- பெண்ணை ஏமாற்றி பாலியல் ரீதியாக உறவு கொண்டும் உண்மை தெரிந்த பிறகு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வருகிற செல்வ நாகரத்தினம் ஐபிஎஸ் மீது சட்டரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காவல்துறை டிஜிபிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மனு அளித்துள்ளது. இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் காவல்துறை தலைமை இயக்குந ருக்கு (டிஜிபி) அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களிலும் செய்தித்தாள்களிலும் வார இதழ்களிலும் தமிழகத்தில் பணியாற்றும் செல்வநாகரத்தினம் ஐபிஎஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இது சம்பந்த மாக சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம். சமூக வலைதளத்தின் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு இணக்க மாக பேசி, தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்வதாக பொய்யான தகவலை யும் சொல்லி, திருமணம் செய்து கொள்வ தாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு வைத்தார் என்ற புகார் பாதிக்கப்பட்ட பெண்ணால் அளிக்கப்பட்டுள்ளது. செல்வ நாகரத்தினம் தன்னை ஏமாற்றியதை புரிந்து கொண்டு அந்தப் பெண் கேள்வி எழுப்பிய போது, சுட்டுக் கொன்று விடுவ தாக மிரட்டியதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன. பொய்யான தகவலின் அடிப்படையில் பெண்ணிடம் பெறப்பட்ட சம்மதம் முறையான சம்மதம் அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். தங்களுக்கு வந்த புகாரின் அடிப்படை யில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப் பட்டதும், சிபிசிஐடி, செல்வ நாகரத்தினம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த தும், அதை எதிர்த்து அவர் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் ஊடகங்களில் செய்தி களாக வெளிவந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆபத்து?
தற்போது செல்வ நாகரத்தினம் நீதி மன்றத்தை அணுகியுள்ளதாக தெரிய வருகிறது. இதற்கிடையே பல்வேறு நபர்கள் மூலமாக , பாதிக்கப்பட்ட பெண்ணு க்கு மிரட்டலும் புகாரை வாபஸ் வாங்கு வதற்கு பணம் கொடுப்பதற்கான முயற்சி யும் நடந்து வருகிற சூழலில், பாதிக்கப்பட்ட பெண் தற்போது உறவினர்கள், நண்பர் களோடு தொடர்பில் இல்லை. எனவே அவருக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்திருக் கிறதா என்கிற கவலையும் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் செல்வ நாகரத்தி னத்தின் மீது சட்ட ரீதியான மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும். தன் மீதான நடவடி க்கையில் இருந்து தப்பிப்பதற்காக அனைத்து முகமைகளையும் அவர் அணு கிக் கொண்டே இருப்பார். அதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பது நியாயமல்ல. பாதிக்கப்பட்ட பெண்களை இது, நீதிக்கான போராட்டத் தில் நம்பிக்கை இழக்கச் செய்யும். குற்றங் களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரி தனது பொறுப்பை தவறாக பயன்படுத்தி குற்றம் இழைப்பது வன்மையான கண்ட னத்துக்குரியது. எனவே செல்வநாக ரத்தினத்தின் மீது உரிய நடவடிக்கை உட னடியாக எடுக்கப்பட வேண்டும் என வும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அனைத்துவித பாதுகாப்பினையும் அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.