அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 17 அன்று ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்து விட்டது. ஜூன் 21 - புதனன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறையின் மேல்முறை யீட்டு மனு மீது, தனது தரப்பு கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் செவ்வாயன்று கேவியட் மனு தாக்கல் செய்தார்.