சென்னை, டிச.8- மூத்த தொழிற்சங்கத் தலைவர் தோழர் கே.கே.என். குட்டி காலமானார். அவ ரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: தொழிற்சங்க தலைவர் களில் ஒருவரும், மத்திய அரசு ஊழியர் மகா சம்மே ளனத்தின் முதுபெரும் தலை வர்களில் ஒருவருமான தோழர் கே.கே.என். குட்டி (வயது 75) உடல்நலக் குறை வால் கேரளா மாநிலம், கோழிக் கோட்டில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பல னின்றி டிசம்பர் 8 அன்று உயி ரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கி றது.
தோழர் கே.கே.என். குட்டி ஒன்றிய அரசு ஊழி யர்கள் சங்கத்தின் இயக்கங் களில் முன்னணி அமைப்பா ளராக திகழ்ந்தவர். ஊழியர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். ஒன்றிய அரசின் வருமான வரித்துறை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக பணி யாற்றிய காலத்தில் ஊழி யர்களை அணி திரட்டி பலம் பொருந்திய அமைப்பாக நிறுவியதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர். வரு மான வரித்துறையிலிருந்து பணி ஓய்வுபெற்ற பின்பு அகில இந்திய ஓய்வூதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர். அவரது மறைவு உழைக்கும் மக்களுக்கும், தொழிற்சங் கங்களுக்கும் ஏற்பட்ட பேரி ழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்தாருக்கும், உற வினர்களுக்கும், ஊழியர் களுக்கும் அனுதாபத்தை யும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.