சென்னை, அக்.4- ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வலி யுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை 250-க்கும் மேற்பட் டோர் உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் 2009 மே 31 ஆம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைய வலியுறுத்தி கடந்த 14 ஆண்டுகளாக ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர். கல்வித் துறை சார்பில் பல்வேறு கட்ட பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமைச் செயலகத்தில் புத னன்று(அக்.4) ஆலோசனையில் ஈடு பட்டார். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கை யை பரிசீலிக்க மூவர் கொண்ட குழு அமைக் கப்படும். மூன்று மாதங்களில் ஆய்வு செய்து மூவர் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். மூவர் குழுவில் பள்ளிக் கல்வித்துறை செய லர், நிதித்துறை செயலர், தொடக்க கல்வி இயக்குநர் உள்ளனர். ஆசிரியர்களுக்கு ரூ.10 லட்சத்தில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப் படும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு தற்போ தைய ஊதியமான ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 அதிகரித்து ரூ.12,500 வரை ஊதிய உயர்வு உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். போராட்டம் தொடரும் இதனிடையே டி.இ.டி ஆசிரியர்கள் உள்ளிட்ட மூன்று அமைப்புகளின் சார்பில் போராட்டம் தொடரும் அறிவிக்கப்பட்டுள் ளது. பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்க தலைவர் சேர்ந்த ஜேசுராஜா கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தேர்தல் அறிக்கையில் அரசு அளித்த பணி நிரந்தரம் செய்யப்படும் என்பதை நிறைவேற்ற வேண் டும் என கூறினார். இதற்கிடையே, காலாண்டு விடுப்பு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 1 முதல் 5 ஆம் வகுப்புக்கு பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி தொடங்கியது. வரும் அக். 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ள பயிற்சியை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் புறக்கணித்துள்ளனர்.