states

இளைஞர்கள் தங்களிடமுள்ள திறன்களை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்துக!

சென்னை,ஜன.20- தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டத்தின்கீழ் தனியார் பங்களிப்பு டன் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக செய்முறை பயிற்சிகள் உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அமெ ரிக்க-இந்திய அறக்கட்டளையின் உதவியில் சென்னை அரும்பாக் கத்திலுள்ள அரசு மாதிரிப் பள்ளியில் ஸ்டெம் வகையிலான நவீன கணித, அறிவியல், தொழில்  நுட்ப ஆய்வகம் அமைக்கப் பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற  துணைத் தலைவரும், விஞ்ஞானி யுமான மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். அமெரிக்க-இந்திய அறக் கட்டளை மூலம் சென்னையில் உள்ள 12 அரசுப் பள்ளிகளில் பயி லும் 200 மாணவர்களுக்கு ராக்கெட்  அறிவியல் குறித்த செய்முறை பயிற்சி தரப்பட்டது. அதன்வாயி லாக மாணவர்களே வடிவமைத்த ராக்கெட் மாதிரிகள், சிறிய ரக  ட்ரோன்கள் வானில் பறக்கவிடப் பட்டு சோதனை மேற்கொள்ளப் பட்டது. அப்போது மாணவிகள் வடிவமைப்பில் சிறிய ட்ரோன்  செயற்கைக்கோள் மூலம் குறிப்பிட்ட இடத்தின் வெப்ப நிலை, காற்றின் வேகம், ஈரப்பதம்  உள்ளிட்ட தரவுகள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டன.

விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காணொளிக் காட்சி வாயிலாக பேசும்போது, ‘‘இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னையிலுள்ள ஒரு அரசுப் பள்ளியில்தான் ஸ்டெம் வகை ஆய்வகம் அமைக்க ப்பட்டுள்ளது”என்றார். இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு இளம் விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள். இத்தகைய முன்னெடுப்புகள் அதற்கு உதவிகரமாக இருக்கும்.  மேலும், பள்ளிகளில் அறிவியல்  சார்ந்த ஆர்வத்தை மாணவர்க ளிடம் தூண்டுவதன் மூலமே இளம் விஞ்ஞானிகளை உருவாக்க  முடியும் என்றும் அவர் கூறினார். விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், “உலகத்தில் அதிக மக்கள் தொகை நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. நம்மிட முள்ள இளைஞர்கள் திறன்களை  நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அதைபள்ளிகளி லேயே தொடங்க வேண்டும். ஆனால், விளையாட்டுக்கு கொடுக்கும் அளவுக்குகூட அறிவி யல் தொழில்நுட்பத்தை வளர்க்க  நமக்கு வாய்ப்புகள் தரப்படுவ தில்லை. இந்நிலை மாற வேண்டும்.  அதற்கு வானவில் மன்றம் திட்டம் உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் க.இளம் பகவத்,  அமெரிக்க - இந்திய அறக்கட்டளை யின் இயக்குநர் மேத்யூ ஜோசப் கலந்து கொண்டனர்.