ஸ்ரீநகர், மே 31- காஷ்மீரில் பள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் உயிரிழந்தார். ஜம்முவின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஜ்னி பாலா (36). இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்புரா பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசி ரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஆசிரியர் ரஜ்னி செவ்வாயன்று காலை பள்ளியில் வழக்கமான பணிகளைச் செய்து கொண்டிருந்தார். அப்போது, பள்ளி க்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் ரஜ்னியை சர மாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். சக ஆசிரியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டுசென்றனர். மருத்துவமனையில் ரஜ்னியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இந்தச் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர். காஷ்மீரில் இம்மாதத்தில் டார்கெட்டட் கொலைகள் எனப்படும் இலக்கு கொலைகளில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அதில், மூன்று பேர் காவல்துறையினர், நான்கு பேர் பொதுமக்கள் ஆவர்.