சென்னை, ஜூன் 11- அரசு பள்ளிகளில் பணி யாற்றும் பொறுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரி யர்களுக்கு பதிலாக தற்கா லிக ஆசியர்களை நியமித் துக்கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதியளித்துள் ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: “பள்ளிக் கல்வித்துறை யின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் காலிப்பணி யிடங்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப்பணியிடங் கள் மற்றும் அரசு உயர் நிலை/மேல்நிலைப் பள்ளி களில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்து, அவற்றுள் மூத்த பட்டதாரி / முதுகலைப் பட்ட தாரி ஆசிரியர் பொறுப்பு தலைமையாசிரியராகப் பணிபுரிவதால் பதிலியாக பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக அடிப்படை யில் இடைநிலை/பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு மதிப்பூதி யம் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.12,000-, ரூ.15,000- மற்றும் ரூ.18,000- வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அந்த அரசாணையில் ‘வரும் ஆண்டுகளில் தொடக்கக் கல்வி துறை மற்றும் பள்ளிக் கல்வி துறையில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங் களை நேரடி நியமனம்/பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை, மாணவ, மாணவிகளின் கல்வி நலன் கருதி, ஒவ் வொரு ஆண்டும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நிய மனம் செய்ய பள்ளிக் கல்வி ஆணையருக்கு அதிகாரம் அளித்து ஆணை வழங்கப் படுகிறது’ என குறிப்பிடப்பட் டுள்ளது.
அரசாணையில் குறிப் பிட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டும், சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப் பட்ட இடைக்கால மற்றும் இறுதி தீர்ப்பாணைகளின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகளை (Guide lines) தவறாமல் பின்பற்றி 2023-2024 ஆம் கல்வியாண் டிற்கு பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் உள்ள காலிப்பணியிடங் கள்/மகப்பேறு விடுப்பில் சென்றதாலும், பள்ளித் தலை மையாசிரியர் பணியிடம் காலியாக இருந்து அவற் றுள் பொறுப்புத் தலைமை யாசிரியராக பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பதிலியாக வும், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக நிய மனங்களை செய்ய நடவ டிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நேர்வில் நடப்பு (2023-2024) கல்வியாண் டிற்கு தற்காலிக ஆசிரியர் களை நியமிக்கும் போது, சென்ற ஆண்டு (2022-2023) மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசி ரியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளும்படியும், கடந்த ஆண்டைவிட கூடுதலாக நிய மனம் செய்யப்பட தேவை இருப்பின், எவ்வளவு தேவை என்பதை கடிதம் வாயிலாக தெரிவித்து, பின்னர் நியம னம் செய்து கொள்ள அனை த்து முதன்மைக் கல்வி அலு வலர்களும் அறிவுறுத்தப் படுகின்றனர். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.