states

ராணிபென்னூர் தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிக்கத் திட்டம்?

பெங்களூரு, மார்ச் 16 - கர்நாடக மாநில பாஜக சட்டமேலவை உறுப்பினர் ஆர். சங்கரின் வீட்டிலிருந்து 6 ஆயிரத்திற்கும் அதிகமான சேலைகள், 9 ஆயிரத்திற்கும் அதிகமான பேக்குகள், 2,500 குக்கர்கள் என சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  மேலும், இந்தப் பொருட்களின் மீது எம்எல்சி சங்கரின் படம் பொறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகவே இந்த பொருட்களை ஆர். சங்கர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டம் ராணிபென்னூரைச் சேர்ந்தவர் ஆர். சங்கர். பாஜக-வைச் சேர்ந்த இவர் சட்ட மேலவை உறுப்பினராக இருக்கிறார். முன்னதாக கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில், நடிகர் உபேந்திராவின் கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சங்கர், குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு ஆதரவளித்தார். இதன்மூலம் அமைச்சர் பதவியையும் பெற்றார்.  அதன்பிறகு ‘ஆபரேசன் தாமரை’ மூலம் 17 காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏ-க்களை தங்கள்  பக்கம் இழுத்து, குமாரசாமியின் ஆட்சியை பாஜக கவிழ்த்த  நிலையில், சங்கர் பாஜக பக்கம் தாவினார். இதனால் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கத்திற்கும் உள்ளானார். அதன்பிறகு ராணிபென்னூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அவருக்கு பாஜக வாய்ப்பு வழங்க வில்லை. மாறாக, சட்டமேலவை உறுப்பினர் பதவி வழங்கி யது. தற்போதும் அந்த பதவியிலேயே இருக்கிறார். எனினும் விரைவில் நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ராணிபென்னூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில்தான், ராணிபென்னூர் தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக, ஏராளமான பொருட்களை எம்எல்சி சங்கர் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரின் பேரில், பீரேஸ்வரா நகரிலுள்ள சங்கரின் வீடு மற்றும்  அலுவலகங்களில் வணிக வரித்துறையினர் புதனன்று நள்ளிரவு திடீர் சோதனை நடத்தினர்.  அப்போது, எம்எல்சி சங்கருக்குச் சொந்தமான குடோனி லிருந்து, அவரது படம் பொறிக்கப்பட்ட 6 ஆயிரம் சேலைகள், எல்கேஜி முதல் கல்லூரி வரையிலான மாணவர்கள் பயன்படுத்தும் 9 ஆயிரம் பேக்குகள் மற்றும் 2 ஆயிரத்து 500  குக்கர்கள் உள்ளிட்ட ரூ. 30 லட்சம் முதல் 40 லட்சம் மதிப்பி லான வீட்டு உபயோகப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 1 கோடி என கூறப்படுகிறது.  இதையடுத்து, இந்தப் பொருட்களை வாங்கியதற்கான ஜிஎஸ்டி ரசீதுகளை வணிகவரித்துறை அதிகாரிகள் கேட்டுள்ள னர். ஆனால், அவற்றை உடனடியாக தராத எம்எல்சி சங்கர், அதிகாரிகளிடம் சிறிது அவகாசம் கேட்டுள்ளார். மறுபுறத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கும் எம்எல்சி சங்கர், “வேட்புமனு தாக்கல் முடியும் வரை பொறுத்திருப்பேன்; கட்சி (பாஜக) என்னை அங்கீகரித்திருந்தால், நான் அதனுடன் இருப்பேன்; அவர்கள் என்னை வேட்பாளராக நிறுத்தவில்லை நான் கட்சியை விட்டு வெளியேறுவேன்” என்று அறிவித்துள்ளார்.