states

கொரோனா எதிரொலி; இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு சவூதி அரேபியா பயண தடைவிதிப்பு

ரியாத், மே 23-  கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சவூதி மக்கள் இந்தியா, பெலாரஸ், ஆப்கன், இந்தோனேசியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் முதல் மற்றும் 2வது கொரோனா அலையில் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. கொரோனா பரவலின் 3வது அலை ஏற்பட்டு பின்னர், சமீப காலங்களாக வெகுவாக குறைந்து கட்டுக்குள் இருந்தது.  இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு, சவூதி அரேபிய அரசு இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய தனது குடிமக்களுக்கு தடை விதித்து உள்ளது. இதன்படி, இந்தியா உள்பட லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய 16 நாடுகளுக்கு தங்களது குடிமக்கள் செல்ல தடை விதித்து உள்ளது.