- ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியில் மணல் கொள்ளை குறி த்து விசாரிக்க சென்ற டிஎஸ்பி சுரேந்திர சிங் கை மர்ம நபர்கள் லாரி ஏற்றி கொலைசெய்தனர்.
- நாட்டின் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் உள்ள அக்னிபாதை திட்டத்துக்கு எதிரான வழக்குகளை தில்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் பள்ளி, கல்லூரி மாண வர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண் டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேருந்து நாள் (பஸ் டே) கொண்டாட்ட விவகா ரத்தில் சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- விநாயக் ராவத்துக்கு பதி லாக ராகுல் ஷிவா லேவை அவைத் தலை வராக நியமிக்குமாறு சிவசேனா - ஷிண்டே எம்.பி.க்கள் அணி மக்க ளவை சபாநாயகரை சந்தி த்து வலியுறுத்தியுள்ளது. சிவசேனாவில் உள்ள 19 மக்களவை எம்பிகளில் 12 எம்பிக்கள் ஷிண்டே அணியில் உள்ளனர்.
- கேரள முதல்வருக்கு எதி ராக கடந்த மாதம் விமா னத்தில் போராட்டம் நட த்தியது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.சபரி நாதன் கைது செய்யப் பட்டார்.
- ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் தையல் காரர் கன்னையாலால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகா ரத்தில் வெளிநாட்டு தொ டர்பு எதுவும் இல்லை என தேசிய புலானாய்வு முகமை (என்ஐஏ) தகவல் வெளியிட்டுள்ளது.
- போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு யார் பிரதமராவார் என்பதைத் தேர்வு செய்வதற்கான போட்டி தீவிரமடைந்துள்ளது. தற்போது நான்கு பேர் களத்தில் உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பில் ரிஷி சுனாக் 115 வாக்குகளும், பென்னி மோர்டாண்ட் 82, லிஸ் டிரஸ் 71, கெமி படினோச் 58 வாக்குகளும் பெற்றனர். கடந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறிய பிரேவர்மேன், லிஸ் டிரஸ்சுக்கு ஆதரவு தெரிவித்தாலும் அவரால் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
- அரசுக்கெதிரான தொழிற்சங்கங்கள் போராட்டம் பனாமா நாட்டில் தொடர்கிறது. அரசுக்கு நெருக்கமான பல தொண்டு நிறுவனங்களை அழைத்து உடன்பாடு போட்டு, ஏமாற்றும் முயற்சியில் அரசு இறங்கியது. ஆனால், அந்த உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று போராட்ட அமைப்புகள் கூறிவிட்டன. தங்கள் கோரிக்கைகளை ஏற்காமல் போராட்டம் ஓயாது என்று பனாமாவின் பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றான கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
- ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையில் போர் நடைபெறும் வேளையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஈரானுக்கு பயணம் மேற்கொள்கிறார். சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஈரானின் ஜனாதிபதி இப்ராகிம் ராய்சி மற்றும் துர்க்கியேவின் எர்டோகன் ஆகியோருடன் விவாதிக்கவுள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக நெருக்கடியில் மூழ்கியுள்ள சிரியாவுக்கு இந்தப் பேச்சுவார்த்தை நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.