மும்பை, அக். 25 - “பாஜக அரசாங்கங்கள், பல்வேறு வாக்குறுதிகளை அளித்தா லும் மக்களின் வாழ்வில் இருளே சூழ்ந்துள்ளது” என்று உத்தவ் தாக்கரேவின் ‘சாம்னா’ ஏடு குற்றம் சாட்டியுள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் (ஷிண்டே பிரிவு) சிவசேனா - பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந் நிலையில், உத்தவ் தாக்கரேவின் (சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி) பத்திரிகையான ‘சாம்னா’ மகாராஷ்டிரா மற்றும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. “ஆட்சியாளர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். (அயோத்தியின் சரயூ நதிக்கரை யில் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றி பிரதமர் மோடி தீபாவளி கொண் டாட்டம்) ஆனால் குடிமக்கள் மற்றும் விவசாயிகளின் நிலை என்ன என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒன்றிய - மாநில அரசு கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாலும் மக்களின் வாழ்வில் இருள் சூழ்ந்துள்ளது.
நல்ல நாள் தீபாவளியானது எங்கே தொலைந்து போனது? பொரு ளாதாரம் ஏன் மோசமான நிலையில் உள்ளது? அதிகரித்து வரும் டால ருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ஏன் தொடர்ந்து சரிந்து வருகிறது? பண வீக்கம் ஏன் குறையவில்லை? எரி வாயு மற்றும் பெட்ரோல் விலை ஏன் உயர்கிறது? வேலையில்லாத வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஏன்? - இந்தப் பிரச்சனைகளை குடி மக்கள் எதிர்கொள்கின்றனர். அவை மேலும் மோசமடையும் போது அர சாங்கம் அகற்றப்படும். மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்ச னைகளை குடிமக்கள் மறந்து விட்டார்கள் என்ற மாயையில் அர சாங்கம் இருக்கக் கூடாது. தீபாவளி பண்டிகை முடிவதற்குள் விவசாயி கள் மற்றும் குடிமக்களுக்கு தேவை யான நிவாரணம் வழங்க வேண்டும்.” இவ்வாறு ‘சாம்னா’ ஏடு கூறி யுள்ளது.
உத்தவ் தாக்கரே அணியின் 4 எம்எல்ஏ-க்கள் தன்னுடன் பேசி வருவதாகவும், ஷிண்டே அணியில் சேர அவர்கள் விருப்பம் தெரி வித்துள்ளதாகவும், ஒன்றிய பாஜக அமைச்சர் நாராயண் ரானே இரண்டு நாட்களுக்கு முன்பு கூறி யிருந்தார். இதற்கும் சாம்னா ஏடு பதிலளித்துள்ளது. அதில், “ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த 22 எம்எல்ஏ-க்கள் விரைவில் பாஜக- வில் சேரப்போகின்றனர். மகாராஷ்டி ராவில் தற்காலிக ஏற்பாடாக மட்டுமே முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவை பாஜக நியமித்துள்ளது. முதல்வர் பதவி எந்த நேரம் வேண்டுமானாலும் பிடுங்கப்படலாம். இது அனைவ ருக்குமே தெரியும். ஏக்நாத் ஷிண்டே மீது அவரின் அணியில் உள்ள 22 எம்எல்ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் விரை வில் பாஜக-வில் இணைவர். ஷிண்டே தனக்கும் மட்டுமல்ல, மகாராஷ்டி ரா மாநிலத்துக்கே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறார். மகாராஷ்டிரா ஒருபோதும் ஷிண்டேவை மன்னிக்காது. பாஜக தனது தேவைக்கே ஷிண்டேவை பயன்படுத்தி வருகிறது” என்று.