தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு, மற்றும் தஞ்சாவூர் ஒன்றியங்களைச் சேர்ந்த குடியிருப்புகளுக்கு கொள்ளிடம்ஆற்று நீர் ஆதாரமாகக்கொண்டு ரூபாய் 297 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். நாமக்கல் மாவட்டம் எலச்சிப் பாளையம், மல்ல சமுத்திரம் பரமத்தி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக குடியிருப்புகளுக்கு ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் மொத்த ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரை நீர் ஆதாரமாக கொண்டு ரூ. 160 கோடி செலவில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் திருப்பூர், வேலூர், திண்டுக்கல், நாகர்கோவில், காஞ்சிபுரம், கடலூர் , ஆவடி ஆகிய மாநகராட்சிகள் காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், அல்லிநகரம், மயிலாடுதுறை, திருவாரூர், பழனி, திருவேற்காடு, மாங்காடு, பூந்தமல்லி ஆகிய நகராட்சிகளில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் 100 விழுக்காடு விரிவுபடுத்தி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். (அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவை அறிவிப்பிலிருந்து)