states

img

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

சென்னை, மே 10- அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் மற்றும் மசால்ஜி காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள வரு வாய் நிர்வாக ஆணையரக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் புதனன்று (மே 10) துவங்கியது. மாநிலத் தலைவர் எம்.பி.முருகையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சங்கர லிங்கம், பொருளாளர் சோம சுந்தரம், துணைத் தலை வர்கள் மங்கள பாண்டி யன், குமரேசன், மாநிலச்  செயலாளர்கள் மணிகண் டன், சுப்பு, தமிழரசன், ராஜகோபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 3  ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர். வருவாய்த்துறை அலுவ லர் சங்கத்தின் கோரிக் கைகள் குறித்து கடந்த 9  மாதங்களுக்கு முன்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. ஆனால் 9 மாதங் கள் கடந்த நிலையில் இன்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி கடந்த மாதம் ஒரு மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டம், 12,000க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர் கள் ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு என பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அதன் பிறகும்  கோரிக்கைகளை நிறை வேற்ற அரசு முன்வர வில்லை. எனவே அரசு உடன டியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். என்ற கோரி காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.  இதற்கிடையே வருவாய்  நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், இணை ஆணையர் சிவராசு ஆகி யோர் சங்க நிர்வாகிகளுடன்  நடத்திய பேச்சுவார்த்தை யில் உடன்பாடு எட்டப் படவில்லை. இதனால் போராட்டம் தொடர்கிறது.