லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஆரஞ்சு மாகாணத்தில் உள்ள உணவகத் தொழி லாளர்கள் அடுத்த வாரத்தில் வேலை நிறுத்தம் செய்யப் போகிறார் கள். இந்தப் போராட்டம் மேலும் பல பகுதிகளுக்கும் பரவும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்று கூறியுள்ள தொழிற்சங்கம், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற் கான அறைகூவல் விடுத்தது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட் டம், வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்தின் முன்பாக நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால், அதில் பங்கேற்ற வர்களில் 200 தொழிலாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளைக் குறிவைத்து இந்தக் கைது நட வடிக்கை இருந்தது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகள் தங்களை மேலும் உறுதியாக்கி இருக்கிறது என்று தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி உணவகத் தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.