சென்னை, ஜன. 24 - அறிவியல் அடிப்படை ஆதார மற்ற கருத்துக்களை தெரிவித்த காமகோடி, ஐஐடி இயக்குநர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. ஐஐடி இயக்குநராக உள்ள காமகோடி, மாட்டின் சிறுநீரில் நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளதாகவும், அதை பயன்படுத்துவதாகவும் பேசியிருந் தார். அறிவியல் அடிப்படையற்ற இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பின ரும் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் சார்பில் வியாழ னன்று (ஜன.23) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் டாக்டர் திருநாவுக் கரசு கூறுகையில், “அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்ந்து நிற்கும் ஐஐடி நிறுவனத்தின் இயக்குநர் அறி வியல் ஆதாரமற்ற கருத்துக் களை பரப்புவது சரியல்ல; கண்டிக்கத் தக்கது. இதன் தொடர்ச்சியாக மக்க ளை பிளவுபடுத்தும் வாதங்கள் முன்வைக்கப்படுகிறது. மூட நம்பிக்கையைப் பரப்புவது அர சமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே, காமகோடி தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். அவரது தனிப்பட்ட நம்பிக்கை விஞ்ஞானம் ஆகாது. அறிவியல் ஆராய்ச்சி அமைப்புகள் நிரூபிக்காததை பரப்புவது தவறு. கண்டனத்திற்குரியது. வெட்கம் குழந்தைகள் நல மருத்துவர் மரு. கே.காசி குறிப்பிடுகையில், “வீட்டில் பிரசவம் பார்க்கும் போது தொப்புள் கொடியை அறுத்து சாணியை வைத்து கட்டுவார்கள். இதனால் குழந்தைகள் ரண ஜன்னி வந்து இறக்கும். ஆயிரத்திற்கு 250 குழந்தைகள் இறந்த நிலையை மாற்றி, அறிவியல் மூலம் 15-20 என்ற அளவில் குறைக்கப்பட்டுள் ளது. மக்களை பழைய நிலைக்கு கொண்டு செல்ல காமகோடி அபத்த மான கருத்தை கூறுகிறார். காம கோடி கருத்துக்கு ஆதரவாக மருத்து வர் தமிழிசை சவுந்தரராஜன் பேசு வதை கேட்டு வெட்கப்படுகிறேன்; கண்டிக்கிறேன். காமகோடியின் கருத்து வலதுசாரி அரசியலுக்கே பயன்படும். தொழில்நுட்ப நிறு வனத்தின் இயக்குநர் பதவிக்கே காம கோடி தகுதியற்றவர்; பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.