சென்னை, மே 7 - உடுமலைபேட்டை எரிசனம்பட்டி தொடக்கப் பள்ளியில், மேல்நிலை நீர்தேக் கத்தொட்டி அமைப்பதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கருப்புசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே எரிசனம்பட்டியில் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மைதானத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் தேக்கத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விளை யாட்டு மைதானத்தின் அளவைக் குறைக்கும் வகையில் அமையவுள்ள இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியி ருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் துரைசாமி, தமிழ்செல்வி அமர்வு விசாரித்தது. இது தொடர்பாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாக வும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 9ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.