states

டாஸ்மாக் கடைகள் மீது தாக்குதல்கள்

சென்னை, மார்ச் 10- டாஸ்மாக் கடைகள் மீது தொடரும் தாக்குதல்களால் ஊழி யர்களின் உயிருக்கு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சம்மேள னம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு முழுவதும் 5400க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மது பான சில்லரை விற்பனை கடைகள்  உள்ளன. கணிசமான கடைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத இடுகாடு - சுடுகாடு, வயல்வெளி,  காட்டுப்பகுதிகளில் அமைந்துள்ள தால் சமூக விரோதிகளுக்கு சாதக மான சூழ்நிலையை ஏற்படுத்தி யுள்ளது. கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியில் சமூக விரோதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் துளசிதாஸ் என்கிற விற்பனையாளர் சம்பவ இடத்தி லேயே பலியானார். மற்றொரு விற்ப னையாளர் குண்டு காயங்களுடன் உயிர்தப்பினார். கோவையில் சிதம்பரம் என்பவர் சமூக விரோதிக ளால் தாக்கப்பட்டு முதுகு தண்டு  வடம் உடைக்கப்பட்டு படுகாய மடைந்தார்.  இதே மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் மேற் பார்வையாளர் சமூக விரோதி களால் தாக்கப்பட்டார். கடந்த மாதம் காரைக்குடி தாலுகா பள்ளத்தூர் டாஸ்மாக் கடை யின் மீது பெட்ரோல் குண்டு  வீசப்பட்டது.

எரிந்து போன  சரக்குக்கான இழப்பு தொகையை ஊழியர்களை மிரட்டி வசூலித்து விட்டது. இந்த நிலையில் அதே கடை யில் கடந்த 3.3.2023 அன்று மீண்டும்  பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில்  அர்ச்சுணன் என்கிற விற்பனையாளர் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். முதல் சம்பவத்தின் போதே காவல்துறை குற்றவாளியை பிடித்து  கைது செய்திருந்தால் மீண்டு மொரு சம்பவம் நடந்திருக்காது. காவல்துறையின் மெத்தனப்போக் கும், டாஸ்மாக் அதிகாரிகளின் அலட்சியமே ஒரு ஊழியரின் உயி ருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் இத்தகைய சம்பவங்கள் ஊழியர்கள் மத்தியில் ஒரு விதமான  பதற்றத்தையும் வேலைக்கு வந்தால் உயிருடன் வீட்டிற்கு செல்ல முடியுமா? என்ற  அச்சத்துடன் பணிபுரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து முதலமைச்சர், டாஸ்மாக் கடைகள் தாக்கப்படாத வண்ணம் காவல்துறையின் கண்காணிப்பை அதிகப்படுத்தவும், பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யவும், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு  குறிப்பிட்ட கடையை குறிவைத்து  தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதின்  பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடித்து தண்டனைக்குள்ளாக் கவும் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.