லக்னோ, மார்ச் 19- பாஜகவை தோற்கடிப்பதில் பிராந்திய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பாஜக வுக்கு எதிராக, வரும் நாட்களில் எதிர்க்கட்சி கூட்டணி உருவாகும் என நம்பிக்கை உள்ளது என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். அகிலேஷ் யாதவ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “எதிர்க்கட்சிகளுக்கான கூட்டணி அல்லது முன்னணியை உருவாக்கு வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் அதற் கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற னர். 2024 இல் பாஜகவை தோற்கடிப்பதில் பிராந்திய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். எதிர்வரும் நாட்களில், பாஜகவுக்கு எதிராக, எதிர்க்கட்சி கூட்டணி உருவாகும் என நம்பிக்கை உள்ளது. பிராந்தியக் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக போராடு கின்றன. அவை வெற்றிபெறும் என நான் நம்பு கிறேன் என்று தெரிவித்தார்.