மதுரை, ஜூன் 20 - மாற்றுத்திறனாளிகளுக்கான கிராம உதவி யாளர் பணி நியமனத்தை ரத்து செய்யப் போவ தாக மாவட்ட ஆட்சியர் அனுப்பிய உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 60 சதவீத மாற்றுத்திறனாளியான நான், 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் முத்தையா புரம் ஊராட்சி எழுத்தருக்கு முறைப்படி விண்ணப்பித்து தேர்வு எழுதினேன். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டு கிராம உதவியாளராக பணி புரிந்து வருகின்றேன். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் எனது பணி இன சுழற்சி முறை தவறா னது என கூறி, பணியை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள னர். மாவட்ட ஆட்சியரின் நோட்டீஸிற்கு தடை விதித்து பணியில் தொடர உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், பிற்படுத்தப்பட்டோருக்கான சிறப்பு மாற்றுத்திறனாளி பிரிவில் இட ஒதுக்கீட்டின் கீழ் மனுதாரர் பணி நியமனம் பெற்றுள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் களுக்கான “பிசிஎம்” இட ஒதுக்கீடு பெற்றுள்ள தாக தவறாக புரிந்து கொண்டு மனுதாரர் பணி நியமனத்தை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.