states

பள்ளி சான்றிதழில் நடத்தை குறித்த பதிவு கைவிடக்கோரி அமைச்சருக்கு கடிதம்

சென்னை, மே 16- வன்முறையில் ஈடுபடும் மாணவர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை கைவிட வேண்டும் என பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தலைவர் வே.வசந்தி தேவி, கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எழுதியுள்ள கடிதத்தில்சில பள்ளிகளில் ஒரு  சில வளர் இளம்பருவ மாணவர்கள் பல  வகைப்பட்ட வன்முறைகளில் ஈடுபடுகின்ற னர்.

அவை கண்டிக்கப்பட வேண்டும், தடுத்து  நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்படுவர், அவர்களது சான்றிதழில் அவர்களின் நடத்தை குறித்து பதிவு செய்யப்படும் என்ற உங்கள் அறிவிப்பு மாணவரிடம் கருணையுள்ள ஒரு அரசுக்கு உகந்ததல்ல. மாணவர் வளர் இளம் பரு வத்தில் வன்முறையில் ஈடுபடுவதற்கான காரணம், பின்னணி குறித்து கண்டறிந்து அவற்றை மாற்றவும், தவறு செய்யும் மாணவரைத் திருத்தவும், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். உலகெங்கும், பல நாடுகளிலும் வளர் இளம்பருவத்தினர் பல மன உளைச்சலுக்கு உட்படுவதும், அவர்களுக்கு மன, உடல் நல ஆலோசனைகள் தேவை என்பது  உணரப்பட்டும், மாற்றுகளும், தீர்வுகளும் செய்யப்படுகின்றன.

அவை பெரும்பாலும் பள்ளிகளில் செய்யப்பட்டு, மாணவர் எளிதில் அணுகி ஆலோசனை பெற இயலும். அத்தகைய ஏற்பாடுகள் எவையும் நம் பள்ளி களில் இல்லை. வளர் இளம்பருவத்தினரை அன்பினாலும், அவர்கள் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதன் மூலமும்தான் மாற்ற  இயலும். அவர்களுக்கு அளிக்கப்படும் தண்ட னை அவர்களை கிரிமினல்களாகத்தான் மாற்றும். ஆகவே, அவர்கள் தண்டிக்கப்படு வர் என்பதும், அவர்களது சான்றிதழில் பதிவு  செய்யப்படும் என்பதும் கைவிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறோம்.  ஆசிரியர் தங்களுக்கு வேலை பளு அதிகம் என்று சொல்கின்றனர். ஆசிரியர் - மாணவர் உறவு கல்வியின் ஆன்மா. அதில் அன்பும், பரிவும் இருந்தால் பல பிரச்ச னைகள் தீர்வு காணும். பள்ளிக் கல்வித்  துறை உயர் அதிகாரிகள் சிலர் சிறந்த அர்ப் பணிப்புடன் பணி புரிந்து வருகின்றனர். அவர்களது பொறுப்பில் இந்த ஆழ்ந்த சமுதாயப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற  முயற்சிகளுக்கு எங்கள் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.