வாழ்த்துச் செய்தி
பினராயி விஜயன்
முதலமைச்சர், கேரள அரசு
கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு தனது இரண்டாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்வதையொட்டி தீக்கதிர் தமிழ் நாளேடு ஒரு சிறப்பிதழ் வெளியிடுவதை அறிந்து, நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். தீக்கதிர் நாளிதழ், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களையும், பிரச்சனைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, முன்னிறுத்துவதிலும், அவர்களுக்கு நீதியை பெற்று தருவதிலும் எப்போதும் முன்னணியில் நிற்கிறது. வரும் நாட்களிலும், தீக்கதிர் ஏடு முற்போக்கு கருத்துக்களின் பாதுகாவலராகவும், வர்க்க மற்றும் வெகுஜன போராட்டங்களின் குரலை உயர்த்தி பிடிப்பதில் முன்னோடியாகவும் பயணிக்கும் என நான் உறுதியாய் கூற நம்புகிறேன். சிறப்பிதழ் சிறக்க எனது வாழ்த்துக்கள்!