states

அதிகாரங்களை மீறும் ஆளுநர் ரவி : கே.எஸ்.அழகிரி

சென்னை,ஜன.5- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அதிகாரங்களை மீறுவதால் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்று திரட்டி போராடவேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:- தமிழக பாஜகவின் ஊதுகு ழலாக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என்.ரவி, வரலாற்று திரிபு வாதங்களை தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகத்தில் இவரது பேச்சுகளை பார்க்கிறபோது, அரசியலமைப்பு சட்டம் உரு வாக்கியது ஆளுநரா? அல்லது தமிழக பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா? அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊதுகுழலா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆளுநர் மாளிகையில் அமர்ந்துகொண்டு தமிழக  அரசுக்கு எதிராக அரசியல மைப்பு சட்டம் அளித்துள்ள அதிகாரங்களை மீறுகிற வகையில், தமிழக அமைச்சரவை எடுக்கிற முடிவுகளுக்கு எதிராக  செயல்பட்டு வருகிற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, உடனடி யாக ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக் கையை முன்வைத்து, அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சி களும் ஓரணியில் திரண்டு போராட  வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் செய்தியாளர்கள் சந்திப் பின் மூலம் நாள்தோறும் அவதூறுகளையும், அபத்தங் களையும் கருத்துக்களாக வெளி யிட்டு வருகிறார். இவரது ஆதார மற்ற கருத்துக்களுக்கு விளக்கம் கேட்டால் செய்தியாளர்கள் மீது  கடுமையான கோபத்தை வெளிப் படுத்துவதோடு, மிரட்டுகிற தொனியில் பேசுவது தொடர் கதை யாகி வருகிறது. ஊடகத் துறையை மிகமிக கேவலமாக நடத்துவது குறித்து பத்திரிகை யாளர்கள் சங்கமே கடும்  கண்டனத்தைத் தெரிவித்திருக் கிறது.  இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.